பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378 பாவேந்தருடன் அவரிடம் சொல்ல வேண்டும் என்றேன். சொன்னதும் சரி, சரி என்று அமர்ந்துவிட்டார். அன்று தாய் மொழியில் கல்வி என்ற தலைப்பில் அற்புதமான பேச்சு. மு.வ.வின் தமிழ்ப்பணியைப் பாராட்டி விட்டு எல்லா நல்லா தாம் பண்றே. பின்ன ஏன் பயம்? எல்லாவிடங்களிலும் தமிழ் தான் வேண்டும்-என்று சொல்றது தானே? ஏன் தயக்கம்? என்று மு.வ.விடம் கூறினார். நெஞ்சிலுற்றதை நேரில் கூறும் அவரது இயல்பினை மு.வ. மிக மிகப் பாராட்டினார்.