பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் & -- 383 பாராட்டிவிட்டு நம்ம மணிமேகலை வெண்பா, கண்ணகி புரட்சிக் காப்பியம் புத்தகத் தயாரிப்பு அவ்வளவு நல்லா வரலே...' என்று வருத்தப்பட்டுக் கொண்டதும் எனக்கு நன்கு நினைவில் நிற்கின்றது sk 1963 செப்டம்பர் 22ஆம் நாள் பொள்ளாச்சி நகரில் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலமும் நானும் மற்றும் பல பாரதி அன்பர்களும் ஒன்றாக இணைந்து மிகப் பிரம்மாண்டமான பாரதி விழா நிகழ்ச்சி ஒன்றுக்குத் திட்டமிட்டோம். ஒருநாள் முழுவதுமாகக் காலை முதல் இரவு வரை நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டன. எஸ். இராமகிருஷ்ணன், சிலம்பொலி செல்லப்பன், ரஷ்ய நாட்டுத் தமிழ் மாணவி இசபெல்லா முதலிய பற்பல அறிஞர்களும், கவிஞர்களும் கலந்து கொண்ட பெருவிழாவுக்குப் பாவேந்தரையும் அன்புடன் அழைத்திருந்தோம். விழா நாளன்று பயணியர் விடுதியில் காலை ஏழரை மணிக்கே பாவேந்தர் வந்து சேர்ந்து விட்டார். எங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி உண்டாகும்படி பாவேந்தரின் துணைவியார் பழனியம்மாளும் உடன் வந்திருந்தார். வந்த உடனேயே முகச்சவரம் செய்ய ஆள்வேண்டுமென்று கேட்டார். பக்கத்திலிருந்த முடி வெட்டும் நிலையத்துக்குப்போகலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது. அதெல்லாம் ஒத்து வராது... இங்கேயே ஒருத்தரைக் கூட்டிவா" என்று கர்ஜித்தார். அவ்வாறே உடன் கட்டளையை நிறை வேற்றினோம். மயிலஞ்சந்தை என்ற இடத்தில் பெரிய பந்தல் அமைக்கப் பட்டிருந்தது. காலையில் என் தலைமையில் கவியரங்கம், பாவேந்தர் முன்னிலையில் நிகழ்ந்தது. அந்நிகழ்ச்சியில் அலையாடும் தென்புதுவை அழகாடும் பட்டினத்தின் கலைபாடும் குயிலான கவியரசர் பாவேந்தர் சிலைபோல வீற்றிருக்கச் சிறியேன் அவர்திருமுன் குலம்பாடி நலம்பாடக் குறுக்கிட்டேன் மன்னிப்பீர் என்று மன்னிப்பு கேட்டுக் கொண்டு நான் கவிதை பொழிந்தேன். இளங்கவிஞரின் கவிதைகளைத் தலையசைத்துச் சுவைத்து மகிழ்ந்தார் பாவேந்தர்.