பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 387 புறப்பட்டேன். பகலுணவுக்கு முன் பாவேந்தர் அவர்களைச் சென்னை இல்லத்தில் சந்தித்துப் புறப்படும் நேரங்குறித்துப் பேசினேன். பகல் 1 மணியளவில் புறடபடலாம் என்றார். நான் சென்று மகிழ்வுந்து (வாடகைக்கார்) அமர்த்தி வந்தேன். மகிழ்வுந்தினைப் பார்த்ததும் வாடகை வண்டியா? என்று வினவி, அச்சாரம் தந்துவிட்டாயா? என்று என்னைக் கேட்டார். ஆம்' என்று நான் சொன்னதும் நமக்குப் பழக்கமான வேறு வண்டியுள்ளது. அதற்காகக் கேட்டேன்’ என்றார். நான் அதிலேயே செல்லலாம் என்று கூறியபோது, 'அச்சாரம் தந்து விட்ட பின் மாற்றுவது கூடாது' என்று மறுத்துவிட்டார். பாவேந்தர் அவர்களுடன் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்து சென்ற அந்த நாளை என் வாழ்வின் பொன்னாளாக நினைத்து மகிழ்கிறேன். சென்னையிலிருந்து வாலாசாபாத் வழியாகக் காஞ்சி பச்சையப்பன் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தோம். நான் சிறிது குரல் 'கம்மலாகப் பேசுவதைக் கண்ட பாவேந்தர், என் தந்தைக்கும் இந்தக் குறையிருக்கிறதா என்று கேட்டு அது தீர மருந்து கூறினார். அரிசியுடன் சில மிளகுகளைச் சேர்த்து வாயில் அடக்கிக் கொண்டு சில நாட்கள் பேசிப் பழகுங்கள்; இந்தக் குரல் அடைப்பு நீங்கும்’ என்றார். வாலாசாபாத் அருகில் மகிழ்வுந்து சென்று கொண்டிருக்கும்போது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் சிலர் சைக்கிளில் வருவதைக் கண்டதும் எனக்குச் சிறிது அதிர்ச்சி ஏற்பட்டது. அன்று காலையிலிருந்தே வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்தது. சிறு சிறு துறல்களும் இருந்தன. அவ்வப்போது இலேசான மழையும் இருந்தது. அதனால் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு விட்டதோ என்று நான் அஞ்சினேன். இதற்கிடையில் மகிழ்வுந்து இராஜாம் பேட்டை என்னும் கிராமத்தின் வழியாகச் சென்று கொண்டிருந்தது. அங்கு மாணவர்கள் பலரைக் கண்டதும் மகிழ்வுந்தை நிறுத்திச் சொன்னேன். என்னைப் பார்த்ததும் ஓடிவந்த மாணவர்களை விசாரித்தேன். நான் எதிர்பார்த்தது நடந்து விட்டிருந்தது. மழையின் காரணமாகக் கல்லூரிக்கு மதியம் விடுமுறை என்றும் கவியரங்கம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்றும் முதல்வர் அறிவிப்புச் சுற்றறிக்கையாக வந்தது என்று மாணவர்கள் கூறினர். பாவேந்தரை மகிழ்வுந்தில் பார்த்ததும் அந்த மாணவர்களும் என்னைப் போலவே உணர்ச்சிவசப்பட்டு இப்போது என்ன செய்வது என்று விழியால் கேட்டனர். மிகவும் பரபரப்பு அடைந்திருந்த எனக்கு ஒன்றும் புரியவில்லை. இந்த நாளை