பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 கவி அரசஅரிமா விட்டால் இனி பாவேந்தரைக் கொண்டு விழா நடத்த இயலாது” என்று என் மனம் அறிவுறுத்தியது. மிகவும் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் அங்கிருந்த மாணவர்களிடம், இன்றைக்கு விழா நடைபெறும்; பாவேந்தர் பேசுவார்; நீங்கள் எல்லோரும் திரும்பிக் கல்லூரிக்கு வாருங்கள்; வழியில் காணும் மாணவர்களையெல்லாம் அழைத்து வாருங்கள் என்று கூறிவிட்டு மகிழ்வுந்தில் புறப் பட்டோம். பாவேந்தர் நிலைமையைக் கேட்டார்; வேறொரு நாளில் விழாவை வைத்துக் கொள்ளலாமே என்றார். 'கல்லூரிக்கு மதியம் விடுமுறை விட்டிருந்தாலும் மாணவர்களை யெல்லாம் திரும்ப வரச் சொல்லியிருக்கிறேன்; வழியில் வந்த மாணவர்களை அழைத்துக் கொண்டு அவர்கள் வந்துவிடுவர்; நாம் விழாவை நடத்தலாம் என்றேன் நான். 'அது இயலுமா? என்றார் பாவேந்தர். உங்கள் மீது மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அவ்வளவு பற்று உள்ளது. அதனால் விழா கட்டாயம் சிறப்பாக நடக்கும் நடத்த இயலும் என்று கருதுகிறேன் என்றேன் நான். புன்னகை பூத்த பாவேந்தர் எனக் கொன்றும் இல்லை; உன் ஆர்வத்தைப் பார்த்து மகிழ்கிறேன்; வாழ்த்துகிறேன்; அதனால் நான் வருகிறேன் என்றார். மகிழ்வுந்து எகனாம்பேட்டை என்னும் சிற்றுரைத் தாண்டி அய்யன் பேட்டை வழியாகச் சென்று கொண்டிருந்தது. அய்யன் பேட்டை நான் பிறந்த சிற்றுார். கல்லூரியில் இருந்து ஒரு கல் தொலைவில் உள்ளது. என் தமிழ் உணர்வுக்கும் பற்றுக்கும் தீனி போட்டு என்னை வளர்த்த மண் அது. அங்குள்ள மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பாவேந்தர் கல்லூரிக்குச் செல்கின்றார். என்னும் செய்தி காட்டுத் தீ போல் பரவியது. அவர்கள் கல்லூரி நோக்கி நடந்து வரத் தொடங்கினர். இந்தச் சூழ்நிலையில் மகிழ்வுந்து மாலை 4 மணியளவில் கல்லூரியை அடைந்தது. பாவேந்தர் அவர்களை அழைத்து வந்துவிட்டேன் என்று தமிழ்த் துறைத்தலைவர் பேராசிரியர் கோ. இராமச்சந்திரன் அவர்களிடத்தில் மகிழ்ச்சியுடன் கூறினேன். கல்லூரியில் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்த பேராசிரியர் கவிஞர் மு.பி. பாலசுப்பிரமணியன் அவர்களை உள்ளிட்ட தமிழ்த் துறை ஆசிரியர்களுக்கும், தமிழ்ப் பற்றுள்ள பிற துறை ஆசிரியர்களுக்கும் மகிழ்ச்சியைக் காட்டிலும் ஏமாற்றமே முகத்தில் நிழலாடியது. 'கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டு எல்லோரும்