பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390 - a56fi Siffs confluon வழிவகைகள் குறித்தும் நெஞ்சமெல்லாம் இனிக்கும் வகையில் பேசி முடித்தார். தலைநிமிர்ந்து செம்மாந்து நாங்கள் உட்கார்ந்திருந்தோம். விழா முடிந்த பிறகு முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றேன். தொடக்கத்தில் அறைக்கு வெளியே வந்து பாவேந்தர் அவர்களை முதல்வர் வரவேற்காதது ஒரு குறையாக எங்களுக்கு இருந்தது. முதல்வர் அறையினுள் சென்ற பாவேந்தர் நேராக முதல்வர் இருக்கையைச் சற்று முன்னால் இழுத்துப் போட்டு அதில் அமர்ந்து கொண்டார். ‘என்ன செய்வது! எப்படிச் சொல்வது!’ என்று புரியாத நிலையில் நாங்கள் அஞ்சிக் கொண்டிருந்தோம். சிறிது நேரம் நின்று கொண்டிருந்த முதல்வரும் ஏதோ வேறு வேலை நிமித்தமாக வெளியே செல்வது போல் சென்று விட்டார். பாவேந்தர் இதைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை 'கவி அரச அரிமா (கவிராஜ சிங்கம்) என்னும் தமிழ்த் தொடரின் பொருளை அன்று உணர்ந்தேன். முரசுக் கட்டிலில் ஏறி உறங்கிய சங்கத் தமிழ்ப் புலவர் மோசிகீரனார் என் நினைவில் நிழலாடினார். முதல்வரின் அறையில், முதல்வர் அமரும் இருக்கையில் பாவேந்தர் அமர்ந்திருப்பதைக் கண்ட ஆசிரியர்கள் மூக்கின் மேல் விரலை வைத்து வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். இப்போது பாவேந்தர் ஒரு சிறிய ஸ்டூலை இழுத்து முன்னால் போட்டு, அதன் மீது கால்களைத் துக்கி வைத்துக் கொண்டு பேசத் தொடங்கினார். பாவேந்தர் செயலை இன்றும் ஆராய்ந்து பார்க்கின்றேன். அந்தப் புரட்சிக் கவிஞரின் உள்ளத்தைப் புரிந்து கொள்ள என்னால் இயலவில்லை! ஆகவே வாழ்த்தி வணங்குகிறேன். வீறுபெற்றுச் சிறக்கும் வல்லமை பெறுகின்றேன். வாழ்க பாவேந்தர் புகழ்! வளர்க அவர் புரட்சியுள்ளம்!