பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

408 என் தந்தையின் நண்பர் செந்தமிழ்த் தொண்டர் அவர் படம் அன்று திறக்கப்பட்டது. அன்று திறந்த அதேபடம் இன்றும் வ.உ.சி. உயர்நிலைப்பள்ளியில் உள்ளது. அந்த விழாவுக்காகத்தான் சுயர்கூப் பள்ளிக்கூட மாணவர்கள் அன்று நடித்தனர்; கதை வசனம் எழுதியவர்கள் என்தந்தையார் பாடல்கள் எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசனார். நாடக ஒத்திகை எங்கள் வீட்டில் நடக்கும். பாரதிதாசனார் என் தந்தையாரின் நண்பர்: ஒருசாலை மாணாக்கரும்கூட. இருவரும் பேராசிரியர் பங்காரு பக்தரிடம் பயின்றவர்கள். அதனால் ஒத்திகை பார்க்கப் பாரதிதாசனார் எங்கள் வீட்டுக்கு வருவார். காலில் பாந்துாப்ள் (Pantoபரிe)', ஆடை கதர், அமெரிக்கன் கிராப், சுறுக்கான அரை மீசை, உதட்டில் ஒர் இளநகை, கனிந்த பார்வை, அந்த இளநகையை இன்றுவரை எந்த ஆடவரிடமும் கண்டதில்லை. 'சிவகுரு' என்ற இனிய குரலை எழுப்பிக்கொண்டே உள்ளே வருவார். எங்கள் வீடு குசக்கடை வீதியில்-அதாவது இன்றைய அம்பலத்தாடு ஐயர் மடத்து வீதியில் ஒருசிறு வீடு ஒரே ஒர் அறைதான் உண்டு. அந்த அறையில் ஒரு கைப்பிடி நாற்காலியில்-ஒருகால் நாற்காலி மேலும் ஒருகால் கீழுமாக-கம்பீரமாகச் சாய்ந்து உட்காருவார். அவர் ராஜமிடுக்கோடு உட்கார்ந்திருப்பதை-பின்னால் தீட்டப்போகும் அந்த அழகோவியத்தை-என் இடுப்பில் இரு கைகளையும் வைத்துக் கொண்டு தலைசாய்ந்து ரசிப்பேன். டேய் நீ பாடுவியா? என்று கேட்டார். பாடுவேன் என்று நான் தலையசைத்தேன்; பாடச் சொன்னார். எஸ்.ஜி. கிட்டப்பா அவர்கள் பாடியிருந்த எவரணி என்ற தெலுங்குப் பாட்டைப் பாடினேன். அவருடைய உதட்டில் ஒர் புதிய நகை அரும்பியது; என்னைக் கூர்ந்து பார்த்தார். நான் ஒரு பாட்டு சொல்லித் தரேன்; பாடுறயா? என்றார். உம் என்றேன். உடனே தாள் எடுத்தார் எழுதினார். முதல் வரியைப் பாடிக் காட்டினார். நானும் பாடினேன், அந்த முதல் வரி என்ன? 'கூவாயோ கருங்குயிலே இந்தப் பாடல் தான் பின்னர் நாடக விழாவில் பாடப்பட்டது. பிரெஞ்சுக்காரர்கள் பாவேந்தரை மதிப்பதற்குத் காரணமாக இருந்த பாடல் இது தான். நாவலர் நெடுஞ்செழியன் இந்தப் பாடலை ஒசை நயம் குன்றாமல் எடுத்துரைக்கும் போதெல்லாம் பாரதிதாசனாரின் இள நகையோடு கூடிய முகம் தான் என் கண் முன் நிற்கும். 1) Pantoufle-Slipper LÍNEYJSsfé slæmsb.