பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

undagһgit-sctudx+qosoёаужыһ 415 கணிஒன்று தோலுரித்துச் சுளையோடு கன்னல் கலந்ததாய்ப் பாடம்மாபாடுநீ (பிறந்தநாள்....) பெரிய பெண்ணானால் ஆடவாசொல்வார் உஃஉஃ. அரியதமிழ்பாடி ஆடவேண்டாமா ஆமாம் திருவோங்கு செந்தமிழ்ப் பாண்டியன் பாட்டுச் செப்பிய வண்ணமே ஆடிக்காட்டு நீ. (பிறந்தநாள்....) பிறிதொரு முறை நான் படித்துக் கொண்டிருந்தபோது என்னுடைய குரலை இனிமையான நம் தமிழோடு ஒப்பிட்டு 15.4.62இல் குயில் ஏட்டில் ஒரு பாடல் எழுதி வெளியிட்டார்.

என் சின்னத் தம்பி சேரன் பிறந்த பிறகு முத்தியால் பேட்டையில் இருக்கும் என்தாத்தாவின் மற்றொரு வீட்டில் நாங்கள் குடியமர்த்தப் பட்டோம். தாத்தாவும் அம்மாயியும் சேர்ந்து செய்த ஏற்பாடு இது. அங்கு கொஞ்சநாள் வரை மின்சார வசதியில்லாமல் இருந்தது. அதனால் தாத்தா மிகவும் பாதிக்கப்பட்டார். எப்போதும் அவருக்கு மின்விசிறி ஓடிக் கொண்டிருக்க வேண்டும். சென்னையிலிருந்து அவர் வரும்போதெல்லாம் எங்களிருவரையும் பனை மட்டை விசிறியால் விசிறச் சொல்வார். என்னை அன்பாக சின்னக்குட்டி’ என்றே அழைப்பார். தம்பியை "மொட்டைப் பையா என்று அழைப்பார்.

விசிறியை எடுத்து 10 போடு என்பார். 10 போடு என்றால் 10 தடவை விசிறு என்று அர்த்தம், நாங்கள் 1,2,3,4,5 என்று விசிறும் போது எண்ணிக்கையை மறந்துவிட்டு 10 தடவைக்குமேல் 100 தடவை விசிறி விட்டுப் போதுமா தாத்தா? என்று கேட்போம்; தாத்தாவும் மனமிரங்கி போதும்மா என்று கூறி அவிழ்த்து விட்டு விடுவார். இப்பணியில் தம்பி ஒத்துழைக்கமாட்டான். போதாத்தா? எப்பப் பார்த்தாலும் விசிறு விசிறு என்று சொல்லிக்கிட்டு என்பான். நான் மட்டும் பொறுமையுடன் செய்து முடிப்பேன்.