பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/410

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 gustp&#56 seboue >k இவ்வாறு சிறுவர்களுக்காகவும், தமிழுக்காகவும், பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், தமிழ் மண்ணில் தோன்றித் தமிழால் உயர்ந்து, தமிழை உயர்த்திய பாவேந்தர் அவர்களின் பேத்தியாகத் தோன்றி, அவரின் தலையாய கொள்கைகளை முழு உணர்வோடு பின்பற்றி வாழ்ந்து கொண்டிருப்பதில் உவகை அடைகிறேன். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு நாள் இரவு எட்டுமணி. சமையல் கூடத்திலிருந்து விதவிதமான வாசனைகள் வந்து கொண்டிருக்கின்றன. வீட்டின் கூடம் நாற்காலிகளாலும் மேசை களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேசைகள் மீது இலைகள் போடப்பட்டு முக்கிய விருந்தினர்க்குப் பிடித்தமான வான்கோழி பிரியாணி, கோழிக்கறி இவைகளெல்லாம் பரிமாறப்பட்டுள்ளன. பலா, வாழை போன்ற கனிகளும் இலையில் இடம் பெற் றிருக்கின்றன. வந்திருந்த முக்கிய விருந்தினர் மற்றவர்கள் உட்பட எல்லாரும் சாப்பிட உட்காருகின்றனர். முக்கிய விருந்தினர் நடுவில் அமர்ந்திருக்க என் தாத்தா ஒருபக்கமும் நான் ஒருபக்கமும் அமர்ந்திருக்கின்றோம். ‘என்னுடைய பேத்தி - முக்கிய விருந்தினர்க்கு என்னை அறிமுகப்படுத்துகிறார் என் தாத்தா. 'உங்களுடைய மகனோட மகளா? 'இல்ல. என்னுடைய பொண்ணு வசந்தாவோட மக. நான் வியப்போடு இதனைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். என் பக்கத்தில் என்னுடைய பெரிய தம்பி அமர்ந்து கொண்டிருக்கிறான். உங்க பாட்டு ஏதாவது பாடுமா? முக்கிய விருந்தினர் கேள்வி. இது நல்லாப் பாடும். பாடு-என தாத்தாவின் குரல். உரத்த குரலில் பாடி முடிக்கிறேன் நான்; எல்லாரும் சிரித்துக் கொண்டே கைதட்டுகின்றனர். விருந்தின்போது நான் பாடியதைக் கேட்டு, எல்லாரையும் வியக்க வைத்த அந்தப் பாடல்: பலவித வாழைப் பழமொடு கொய்யா சில வகைக் கிச்சிலி, பொம்பிலி மாசுடன் சித்தா பழமும், ஆத்து பழமும், குலை குலையாகக் கொடிமுந்திரியும்