பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/417

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம 423 கரண்டியால் சுரண்டி எடுத்துச் சுவைத்தோம். இதில் இரும்புச் சத்து உள்ளது; உடலுக்கு மிகவும் நல்லது என்று நாயுடு கூறினார். மூன்று நாள் பாவேந்தரோடு கோவையில் தங்கியிருந்தேன். இது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்று எண்ணி நான் இன்றும் மகிழ்வதுண்டு. - கோவையில் தங்கியிருந்தபோது ஒரு மகளிர் பள்ளியில் சொற்பொழிவாற்றப் பாவேந்தர் அழைக்கப்பட்டார். பாவேந்தர் தமது பேச்சைத் துவக்கும்போது புதிய வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் மலர்த் தோட்டத்துக்குள் நுழைந்தது போன்ற உணர்வு எனக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார்கள். பாவேந்தர் இல்லத்துக்கு அவரைப் பார்க்க பலரும் வருவர். கலைஞர்கள், கவிஞர்கள், அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள் எனப் பலர். ஒருநாள் தஞ்சைராமையாதாஸ் (திரைப்படக் கவிஞர்) பாவேந்தரைத் தேடி வந்தார். நான் கூடத்தில் அமர்ந்திருந்தேன். ஐயா இருக்காரா? என்று கேட்டார். அப்போது பாவேந்தர் உள்ளே வந்தார். நின்று கொண்டிருந்த இராமையாதாலைப் பார்த்து உட்கார்! எப்படி இருக்கே? என்றார் பாவேந்தர். நீங்க போட்ட பிச்சை ஏதோ நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று பதிலிறுத்தார் இராமையாதாஸ். தாம் கொண்டு வந்திருந்த திருக்குறள் இசைப்பாடல் என்ற நூலைப் பாவேந்தர் கையில் கொடுத்தார். ‘என்ன, போட்ட நூல் வித்துடிச்சா? என்று கேட்டார் பாவேந்தர். 'இல்லைங்க. தரமான நூலை யார் வாங்கறா? உங்கநூல்கள் எல்லாம் நல்லா விற்பனையாகுதுங்களா? என்று கேட்டார் தாஸ். 'ஏதோ ஒடுது' என்று கூறினார் பாவேந்தர். பின்னர் பழைய திரைப்பட வாழ்க்கை பற்றியும் நண்பர்களைப் பற்றியும் உளம் திறந்து சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். >k ஒருநாள் பாவேந்தர் வீட்டுப் போர்டிகோவில் ஒருவர் சுருண்டு படுத்திருப்பதைப் பார்த்தேன். மெலிந்த உடல், சவரம் செய்யாத முகம்; அழுக்கடைந்த ஆடை! நான் உள்ளே சென்று போர்டிகோவில் படுத்திருப்பவர் யார்?’ என்று பாவேந்தரின் துணைவியாரைக் கேட்டேன். "அவந்தா கம்பதாசன். மெரிலாண்டு ஸ்டுடியோ முதலாளி சுப்ரமணியம், பாட்டெழுதினதுக்கு இன்றைக்கு ஐநூறு ரூபா