பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 சுதும்பு மீன் ஒருநாள் கூடினார் பிரிவரோ இனி!' என்று தொடங்கும் காதற் கவிதை ஒன்றை எழுதிப் பாவேந்தர் பார்வைக்குப் பணிவுடன் வைத்தேன். நன்றாக இருக்கிறதே! மேலும் மேலும் தொடர்ந்து எழுது! விட்டு விடாதே" என்று ஊக்கம் கொடுத்துப் பாராட்டினார். குயில் ஏட்டில் வெளியிடுவதற்கு அப்பாடல்தகுதியானது என்பதைக் குறிக்கப் 'பா' என்று எழுதி ஒப்புதல் அளித்து மாப்பிள்ளை தண்டபாணியிடம் கொடுத்தார். என் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளியது. யானும் ஒரு கவிஞன்!” என்ற உணர்வு பெற்றேன். அவர் ஊட்டிய இலக்கியப் பற்றும், கவிதை ஆர்வமும் இன்றும் என் உள்ளத்தில் பசுமையாக உள்ளன. >k பாவேந்தர் நாள்தோறும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் உடையவர். அதிகாலை வேளையில் மிகுந்த சுறுசுறுப்போடும் தூய்மையோடும் காட்சியளிப்பார். காலையில் எழுந்ததும் வீட்டின் முன்பக்கம் உள்ள பலகையில் வந்து அமர்ந்திருப்பார். ஒருநாள் காலைச் சிற்றுண்டியை முடித்துக் கொண்டு பலகையில் அமர்ந்திருந்த போது, அவ்வழியாகப் போய்க் கொண்டிருந்த ஒருவரை நோக்கி, ஏம்பா மார்க்கெட்டுக்கா போற?’ என்று கேட்டார். அவரும் ஆமாங்க ஐயா என்று பதிலிறுத்தார். 'மீன் கடையிலே இந்தச் சுதும்பு மீன் விக்குதான்னு பாத்து வா என்றார். 'சரிங்க ஐயா என்று கூறிச் சென்றார் வந்தவர். நீண்ட நேரம் கழித்து அவர் திரும்பிவந்து, சுதும்பு மீன் இல்லைங்க ஐயா, வேறு மீன் விக்குதுங்க என்றார்.அவர். 'ஒகோ. சரி. நீ போ' என்று சலிப்புடன் கூறினார் பாவேந்தர். பாவேந்தர் எதை விரும்புகிறாரோ அஃது உடனே நிறைவேற வேண்டும். இல்லாவிட்டால் மிகுந்த சலிப்படைவார். அந்தச் சலிப்பு ஒகோ. சரி. நீ போ என்ற அவர் சொற்களில் நிரம்பி வழிந்தது. கவிஞர் அவர்கள் அடிக்கடி கூட்டங்களுக்காக வெளியூர் செல்வது வழக்கம். அவ்வாறு செல்லும்போது யாரேனும் ஒருவரை உடன் அழைத்துச் செல்லுவார். உடன் வருபவர்களிடம் தமக்குத் தேவையானவற்றை வாங்கி வரும்படி பணிப்பார். தம்முடன் வருபவரின் கல்வித்தகுதி, செல்வ நிலை ஆகியவற்றைப் பற்றிக் கவனிக்கமாட்டார். செல்லும் இடத்தில் தமக்குக் கிடைக்கும்