பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 433 "நான் சுப்பிரமணியர்துதியமுது எழுதிய காலத்திலே ஒட்டக் கூத்தன் பாட்டைச் சந்தத்துக்காக விரும்பிப் படிப்பதுண்டு. இதைக்கேளு” என்று சொல்லிக் கீழ்க்கண்ட பாட்டைப் பாடினார். ஒட்டெழுத் தைக்கருத்திற்குறித் திட்டுநித் தம்பரவும் சிட்டர்கட்குத்திருப் பொற்பதத் ச்சிறக் கத் - வட்டநெட் டைப்பணி மெத்தையத் தற்கிடம் வாரிசப்பொ குட்டினத் துக்குலந் தத்திமூத் தீனுங் குறுங்குடியே இதை எவ படிப்பான்? இல்ல. மனசுலதா நிக்குமா?’ என்று கூறி முடித்தார் பாவேந்தர். 2. நம்ம வீட்டுத் திருமணம் சேலம் ஸ்வர்ணாம்பிகா பஸ் உரிமையாளரான ராவ்சாகிப் ரத்தன சாமிபிள்ளை நீதிக்கட்சியில் குறிப்பிடத்தக்கவர். பெரியாரின் நண்பர். சேலம் மாவட்ட அரசியலில் முக்கியப்பங்கு வகித்தவர். மாவட்டக்கழக உறுப்பினராகவும், சென்னைச் சட்டமன்ற உறுப்பினராகவும் பணிபுரிந்தவர். சேலம் நகராட்சிக் கழகத் தலைவராக இருந்து சேலத்தின் முன்னேற்றத்துக்காகப் பாடுபட்டவர். இவர் காலத்தில் சேலம் நகராட்சிக் கல்லூரி சிறந்த முன்னேற்றம் பெற்றது. இவர் நகரவைத் தலைவராக இருந்த காலத்தில் கல்லூரி முதல்வராகத் திருவாளர் இராமசாமிக் கவுண்டரும், பேராசிரியர்களாகத் தேவநேயப்பாவணர், தி.வை. சொக்கப்பர் ஆகியோர்களும் பணி புரிந்தனர். இவர்கள் தமிழ்ப் புலமையும், தன்மான இயக்க உணர்வும் கொண்டவர்கள். பி.ஆர்.பி. என்று சேலம் மக்களால் மதிப்போடு அழைக்கப்பட்டு வந்த திரு.பி. இரத்தன சாமிபிள்ளை 5% அடி உயரமும், அதற்கேற்ற கம்பீரமான தோற்றமும் கொண்டவர்; மிகவும் செல்வாக்கோடு வாழ்ந்தவர். அவருக்கு உரிமையான பெரிய தோட்டமும், அதன் நடுவில் ரத்னா படப்பிடிப்பு நிலையமும் (Rathna Studio) சேலத்துக்கு மேற்கே மூன்றுகல் தொலைவில் 'மாமாங்கம்’ என்ற இடத்தில் உள்ளன. மிகவும் இயற்கையழகு மிக்க சூழலில் அவர் வளமனை அமைந்திருந்தது. சுயமரியாதைக் கட்சித் தலைவர்களும், தமிழறிஞர்களும் அவரைப் பார்க்க அவ்விடத்துக்கு அடிக்கடி வருவதுண்டு. பட்டுக்கோட்டை அழகிரிசாமி, பாவேந்தர், கி.ஆ.பெ. விசுவநாதம் ஆகியோர் அவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள். பட்டுக்கோட்டை அழகிரிசாமி பி.ஆர்.பி.க்கு மிகவும்