பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 பிற்சேர்க்கை N.K.P. வேலு அவர்களின் வீடு. அவர் சாயமருந்துக் கடை வைத்திருந்தார். அண்ணா முதல் தி.க. தலைவர்கள் எல்லாரும் அங்குதான் வந்து தங்குவார்கள். திரு. வேலு இறுதிக்காலத்தில் மிகவும் நொடித்துப் போய் வறுமை வாய்ப்பட்டு இறந்தார். பாரதிதாசன் திருச்செங்கோடு வந்தபோது வேலுவின் வீட்டில் தான் தங்கியிருந்தார். அப்போது பாவேந்தரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஒருமுறை பாரதிதாசனைப் பற்றி நான் வேலுவைக் கேட்டபோது அவர் கூறிய செய்திகள்: "பாவேந்தர் பாரதிதாசனைப் பலமுறை சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவரிடம் அரசியல், இலக்கியம் பற்றி உரையாடியிருக்கிறேன். திராவிடர்கழக ஆண்டு விழாவுக்குப் பாவேந்தர் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது இரண்டு மூன்று நாட்கள் என் வீட்டில் தங்கினார். அந்த ஆண்டு விழாவுக்கு நோட்டீசு அவரால் தான் எழுதப்பட்டது. அந்த ஆண்டு விழா திருச்செங்கோடு சூரசம்ஹாரமடத்தில் நடைபெற்றது. பாரதிதாசன் எழுதித் திருமதி குஞ்சிதம் குருசாமியால் பதிப்பிக்கப் பெற்ற பாரதிதாசன் கவிதை கள் முதல் தொகுதி அந்த ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. பாரதிதாசனுக்குத் திருச்செங்கோடு வட்டத்தில் நிதி திரட்டும் பொறுப்பு என்னிடம்தான் ஒப்படைக்கப்பட்டது. கரூர்க் கட்டி பாளையத்தில் நடைபெற்ற அவருடைய மூத்தமகள் திருமணத் துக்குச் சென்றிருந்தேன். அவர் சேலத்தில் இன்ப இரவு நாடகம் நடத்தியதும், பெரியார் திருமணத்தின்போது அவர் அறிக்கை விட்டதும் எனக்கு நன்கு நினைவிருக்கின்றன. அவரோடு பழகிய நாட்களில் என் உள்ளத்தில் பசுமையாக நிற்கும்படி ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அதை என்னால் என்றும் மறக்க முடியாது. ஒருமுறை ஈரோடு ரயில் நிலையத்தில் நானும், பாவேந்தரும் நாமக்கல் செல்லப்ப ரெட்டியாரும் நின்று கொண்டிருந்தோம். பாவேந்தருடைய சட்டைப்பையில் இருந்த ரூ. 150/-ஐ எவனோ பிக்பாக்கெட் அடித்துவிட்டான். பாவேந்தர் அப்படியே ஸ்தம்பித்துப் போய் நின்று கொண்டிருந்தார். கூப்பிட்டால் பேசவில்லை. பிறகு உணர்வு திரும்பிய அவர், எங்களைப் பார்த்து, "நான் மிகவும் எச்சரிக்கையோடும் சுய உணர்வோடும்தான் இருந்தேன். எப்படி என்னிடம் அவன் களவு செய்தானென்று புரியவில்லை. எப்படிப்பட்ட கலைஞன் அவன்” என்று வியப்போடு கூறினார். நான் அப்போது பாரதிதாசன் என்ற மனிதனைக் 1) செல்வம் டர்க்கிரெட் ஆயில் கம்பெனி: செல்வம் பழைய ஜஸ்டிஸ் கட்சி வீரர் பன்னீர்ச் ல்வத்தைக் குறிப்பிடும்.