பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

440 பிற்சேர்க்கை காமராசர் தமிழை ஆட்சி மொழியாக்கச் சட்டசபையில் தீர்மானம் செய்தது இம்மாநாட்டின் எதிரொலி, பாவேந்தர் தலைமையின் வெற்றி! மாநாடு முடிந்து இளமுருகு பொற்செல்வியின் வீட்டுக்கு உணவருந்தச் சென்றார் பாவேந்தர். உடல் நிலை பாதிக்கப் பட்டிருந்ததால் மது அருந்தக் கூடாது என்று மருத்துவர்கள் பாவேந்தருக்குக் கட்டளையிட்டிருந்தனர். குடித்தால் விரைவில் இறந்து விடுவீர்!’ என்று எச்சரிக்கையும் கொடுத்திருந்தனர். என்றாலும் அனுபவித்த சுகம் அவ்வளவு எளிதில் மறக்கக் கூடியதா? கொண்டா பிராந்தி பாட்டிலை என்றார் பாவேந்தர். தயக்கத்தோடு அவர் இலை முன்னால் மதுப்புட்டி வைக்கப்பட்டது. எதிரில் இருந்த மதுப்புட்டியைக் கண்ணால் பார்த்துக் கொண்டே சாப்பிட்டார். 10. எங்கள் ரெட்டியார் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் ரிஹிர்சல் ஹாலில் பாவேந்தருக்குத் தனி அறை வழங்கப்பட்டிருந்தது. அவருடைய ஏவல் கேட்க ஒரு பணியாளும் அமர்த்தியிருந்தார் டி.ஆர்.எஸ். ஒரு நாள் காலை செல்லப்ப ரெட்டியார் அவரைப் பார்க்க வந்தார். பாவேந்தர் தம் வாழ்க்கையில் அதிகம் மதித்த நண்பர்களுள் அவரும் ஒருவர். பாவேந்தர் அப்போது தான் முகம் மழித்துக் கொண்டு எழுந்தார். ரெட்டியாருக்கும் முகம் மழிக்கச் சொல்லி நாவிதனுக்குக் கட்டளையிட்டு விட்டுக் கழிப்பறைக்குச் சென்றார். கழிப்பறையிலிருந்து அவர் திரும்பி வந்தபோது ரெட்டியாரை நாற்காலியில் உட்கார வைக்காமல் கீழே உட்கார வைத்து மழித்துக் கொண்டிருந்தான் நாவிதன். அக்காட்சியைப் பார்த்ததும் பாவேந்தருக்கு அளவு கடந்த கோபம் வந்து விட்டது. 'ராஸ்கல்! நீ எப்படி ரெட்டியாரைக் கீழே உட்கார வைத்து மழிக்கலாம்? என்று சொல்லி அடிக்கப் போய்விட்டார். ரெட்டியார் தலையீட்டால் அன்று நாவிதன் பிழைத்தான். உள்ளே இருந்த நாற்காலியை எடுத்து வரச் சொல்லி அதிலே ரெட்டியாரை உட்கார வைத்து முகம் மழிக்கச் சொன்னார் பாவேந்தர். 11. வசதிப்படாது சேலத்தில் இன்பஇரவு நாடகம் நடந்து கொண்டிருந்த நேரம். பாவேந்தர் அரிசிப்பாளையத்தில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். பெருஞ்செல்வரும், சேலத்தில் சிறந்த திரைப்படக் கொட்டகை ஒன்றின் முதலாளியுமாக இருந்த ஒருவர் பாவேந்தரைப் பார்க்க விரும்பினார். அவர் தம் பணியாள் ஒருவனைப் பாவேந்தரிடம் அனுப்பி, "எங்கள் முதலாளி உங்களை இப்போது பார்க்க