பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒருபல் o - 53 முழுக்கால் சட்டை அணிந்து வந்தால் ஊர் மக்கள் கூட்டம் கூடிக் கொண்டு பார்ப்பார்கள். பொதுவாகச் சட்டைகளை நாம் தலைப்பக்கம் தானே போடுகிறோம்? அதன்படி கால் சட்டையையும் தலைப்பக்கம்தானே போட்டிருக்க வேண்டும்? எப்படி அதைத் தலைப்பக்கம் போட்டிருப்பார்கள் என்று அவ்வூர் மக்கள் வியப்போடு பார்ப்பதுண்டு. சிலர் இந்த ஐயத்தை என்னிடம் கேட்டுத் தெளிவு பெறுவதும் உண்டு. “என் தமிழ்ப் புலமையில் எனக்கு எப்போதும் நம்பிக்கையும் உறுதியும் உண்டு. எனக்குத் தமிழ் பயிற்றிய மூன்று ஆசிரியர்களும் பெரும் புலமை பெற்றவர்கள். கால்வே கல்லூரியில் எனக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்த சாரம் பூ, ஆ. பெரியசாமிப்புலவர் தமிழ்க் கடல். அவருக்கு ஒப்பாகத் தமிழ்நாட்டில் யாரையாவது சொல்ல வேண்டுமானால் மதுரை அரசஞ்சண்முகனாரைச் சொல்லலாம். இத்தகைய பெரியார்களிடம் தமிழ்கற்ற நான், எப்போதும் எந்தப் புலவரிடமும் அஞ்சியதில்லை. பெரும் புலவர்களின் பகையைச் சில சமயங்களில் நானே விரும்பித் தேடிக் கொள்ளும் வழக்கமும் உண்டு. "பள்ளி முடிந்து திரும்பும்போது, நிரவியின் தெருத் திண்ணைகளில் நான் பல சுவையான காட்சிகளைக் காண்பதுண்டு. அவ்வூர் வன்னியர்கள் வைணவப் பற்று மிக்கவர்கள்; நாமதாரிகள். அவர்களில் சில முதியோர் தெருத் திண்ணையில் அமர்ந்து "பள்ளியானே! பள்ளியானே!” என்று முடியும் ஆழ்வார் பாசுரங்களை உரக்கப் பாடிக் கொண்டிருப்பார்கள். நாள்தோறும் ஒரே பாடலைப் போகும்போதும் வரும்போதும் கேட்டுக்கேட்டு எனக்குப் புளித்துப்போய்விட்டது. நான் அவர்கள் உட்கார்ந்திருக்கும் திண்ணைக்கருகில் வரும்போது, “நீ தான் எப்பவே பள்ளி ஆயிட்டயே. இன்னம் பள்ளி ஆனேன்; பள்ளி ஆனேன்னு ஏன் கத்திக்கிட்டிருக்கற?" என்று முணுமுணுத்துக் கொண்டு போவேன். நிரவியில் எங்கள் பள்ளியின் எதிரில் இருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் விசுவலிங்கம்பிள்ளை என்பவர். அவர் ஊரில் பெரிய மனிதர். அவர் வீட்டுக் குறட்டில் பலகை அடித்திருக்கும். அதுதான் அவ்வூரின் சங்கப்பலகை விசுவலிங்கம்பிள்ளை மாலை நேரத்தில் யாரையாவது நான்கு பேரைக் கூட்டிவைத்துக் கொண்டு தப்புந்தவறுமாகத் திருவிளையாடற் புராணம் சொல்லுவார். விசுவலிங்கம் பிள்ளையின் ஆசிரியர் இராமசாமிப்புலவர் என்பவர்.

  • பள்ளி என்பது வன்னிய சமூகத்தார்க்கு வழங்கும் பல பெயர்களுள் ஒன்று.