பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேந்தர்-ஒரு பல் g * 57 திங்கள் ஆனதும் என்மீது கெப்ளேயின் ஆட்கள் பொய் வழக்குப் போட்டு ஒரு மாதம் மூன்றுநாள் சிறையிலே தள்ளி விட்டார்கள். திருபுவனை வட்டாரத்தில் எனக்குச் செல்வாக்கு அதிகம். அங்கு "வாத்தியார் சொன்னால் சொன்னதுதான். அந்த வட்டாரத்தில் மொத்த ஒட்டு 50.15. நான்கு தேர்தல்களில் தொடர்ந்து 5015 ஒட்டுகளையும் சரமாக அடித்துவிட்டேன். மேயர் தேர்தலானாலும் சரி, சட்டசபைத் தேர்தல் ஆனாலும் சரி, தெபிதே தேர்தல் ஆனாலும் சரி, நான் யாரை ஆதரிக்கிறேனோ அவருக்குத்தான் வெற்றி. அரசியற் காழ்ப்பின் காரணமாக என் மீது சாட்டப்பட்ட பொய் வழக்கு நடந்து கொண்டிருந்த சமயத்தில் எனக்குத் திருமணம் பேச்சு நடந்தது, வழக்கு முடிந்து தண்டனையை அனுபவித்துவிட்டு வந்த பிறகு திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னேன். அதன்படி சிறையிலிருந்து வெளிவந்து இரண்டு திங்கள்கள் கழித்த பிறகு எனக்குத் திருமணம் நடைபெற்றது. நான் 1891ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 18ஆம் நாள் பிறந்தேன்.3 திருமணத்தின்போது எனக்கு வயது 28 முடிந்துவிட்டது. என் தாயார் பெயர் இலட்சுமியம்மாள், மனைவியின் பெயர் பழனியம்மாள். 1 இப்பொய் வழக்குச் செய்தியைப் பற்றிப் பாவேந்தர் தம்முடைய தடும்டி விளக்கு இரண்டாம் பகுதியில் குறிப்பிடுகிறார். ஐயா யிரமக்கட்டுது) ஆம் உரிமை காக்கநான் பொய்யர் தம்மை எதிர்த்த போதென்னைப் - பொய்வழக்கால் சேர்த்த சிறையெனக்கோ தென்றல் வரும் சோலையன்றோ? 2 தெயிதே - Deputy என்ற ஆங்கிலச் சொல்லுக்கு நேரான பிரெஞ்சுச் சொல். புதுவை யிலிருந்து பிரெஞ்சுப் பாராளுமன்றத்துக்கு அனுப்பப்படும் பிரதிநிதி தெயிதே எனப்படுவார். 3. பாவேந்தரின் பிறந்தநாள் இரண்டு விதமாக அவருடைய நூல்களில் குறிப் பிடப்பட்டுள்ளன. பாரதிதாசன் கவிதைகள் முதற் பதிப்பிலும் (1928) இரண்டாம் பதிப்பிலும் (1940) கவிஞர் மலரிலும் (குயில் நிலையம் 1946 (7.4.189) தான் பிறந்த நாளாகக் குறிக்கப்பட்டுள்ளது. இப்போது வெளியாகும் பாவேந்தர் நூல்களில் 29.4.1891 பிறந்த நாளாகக் குறிக்கப்படுகிறது. இந்த ஐயத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் நான் பாவேந்தரையே கேட்டேன், உங்கள் பிறந்த நாளைச் சரியாகச் சொல்லுங்கள் என்று. என் பிறந்தநாள் 18.4.1891தான் என்று அவர் சொன்னார். பிறந்த நாள் ஒன்றும். பள்ளிப் பதிவேட்டில் குறிப்பிடப்படும் பிறந்தநாள் ஒன்றுமாகப் பெரும்பாலோர்க்கு ஆகிவிடுவதுண்டு. பாவேந்தர் பிறந்தநாளைக் குறிப்பிடுவதிலும் அத்தகைய பிழை நேர்ந்திருக்கலாம்: புதுவை நகர்மன்றப் பதிவேட்டில் 29.4.1891ல் பாரதிதாசன் பிறந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே சரியானது.