பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 அந்தநாட்கள் கூறுவதுபோல் உள்ளே இருந்து பேசினார் முத்தைய செட்டியார். பின் புறப்பட ஆயத்தமானார். பாவாணருக்குப் பரிந்துரை செய்ய வந்திருந்த புலவர்கள் யாரும் வாயே திறக்கவில்லை. செட்டியார் வெளியில் வந்து என்னை வணங்கிவிட்டு நான் போய் வருகிறேன் என்று கூறி விடைபெற்றுச் சென்றார். பாவாணருக்குப் பரிந்து குயிலில் நான் எழுதியும், அவர் என்னை வந்து பார்க்கவில்லை. ஒருகால், என் தலையீட்டால் அவருடைய பதவிக்குத் தொல்லை நேரலாம் என்று அவர் நினைத்திருக்கக்கூடும்”. அதன்பிறகு மறைமலையடிகளைப் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது. இக்கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழறிஞரையும் மறைமலையாரையும் தொடர்புபடுத்திப் பாவேந்தர் ஒரு செய்தி குறிப்பிட்டார். “காந்தியடிகள் விதேசித் துணியெரிப்புப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நேரம். இப்போராட்டம் மறைமலையாருக்குச் சிறுபிள்ளைத்தனமாகப்பட்டது. வெளிநாட்டுத் துணிகளைக் கடற்கரையில் போட்டுக் கொளுத்துவதைக் கண்டஞ்சி ஆங்கிலப் பேரரசு இந்தியாவை விட்டு ஓடிவிடும் என்று நினைப்பது முட்டாள்தனம் என்று பத்திரிகையில் எழுதினார். அப்போது சென்னை மாநில முதலமைச்சராக இராஜகோபாலாச்சாரியார் இருந்தார். அவர் இவரை மறைமலையாரிடம் அனுப்பி மாதம் ரூ.500/- சம்பளத்தில் நல்ல வேலை கொடுப்பதாகவும், காங்கிரசைத் தாக்கி எதுவும் எழுதவேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார். மறைமலையார் இவரை நோக்கி 'போ! போ! இது மாதிரி வேலைக்கு இனிமே வராதே" என்று கூறி அனுப்பிவிட்டார். மறைமலையாருக்கு வடமொழியும், தமிழும், ஆங்கிலமும் கூடிய செறிந்த புலமை வாய்த்திருந்தது. அத்தகைய புலமை பெற்றோர் அவருக்குப் பிறகு யாரும் தோன்றவில்லை. அவரிடமிருந்த குறை சைவத்தை நிலைநாட்டவே தம் வாழ்வைச் செலவிட்டதுதான். அதன்பிறகு இலக்கியப் பரிசுகளைப் பற்றி எங்கள் பேச்சுத் திரும்பியது. ஆண்டுதோறும் ரூ.5000/- வட்டி வரும்படி நிலையான ஒரு தொகையைச் சேர்த்து, ஒரு பரிசுத்திட்டத்தை நிறுவ வேண்டும். அதற்குப் பாரதிதாசன் பரிசு என்று பெயர் வைக்க வேண்டும். அந்த ஐயாயிரம் ரூபாயையும் ஆண்டுதோறும் வெளியாகும் நல்ல ஒரு தமிழ்க்கவிதை நூலுக்குப் பரிசாக வழங்க வேண்டும்” என்று நான் சொன்னேன். "ஆமாம்! ஆனால் இதை இந்த நாட்டு மக்கள் அல்லவா செய்ய வேண்டும்? என்று கூறினார் பாவேந்தர்.