பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒரு பல்கலைக்கழகம் 77 தியேட்டர்ஸ் நிறுவனத்துக்கு நான்கு படங்கள் கதை வசனம் எழுத ரூ. 40,000/-க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தேன். அந்த ஒப்பந்தங்களை கேன்சல் செய்யும்படி டி.ஆர்.சுந்தரத்துக்குக் கடிதம் எழுதினேன். அடுத்த படத்துக்காக நான் வசனம் எழுதியிருந்த சில காட்சிகளின் கையெழுத்துப் படியை வாங்கி வரும்படி சொல்லி ஒர் ஆளை டி.ஆர்.எஸ். அனுப்பியிருந்தார். அந்தக் காட்சிகளை எழுதியதற்காக ரூ.3000/- வாங்கி வரும்படி அந்த ஆளிடம் சொல்லி அனுப்பினேன். அவனும் சென்று ரூ.3000/-க்கு ஒரு காசோலை வாங்கிக் கொண்டு வந்தான். அதற்குள் புதுவை செல்லப் பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்து விட்டேன். பின்னர் ஒரு குதிரை வண்டியில் பெட்டி படுக்கையை ஏற்றினேன். வந்த ஆளோடு நானும் ஏறி, வண்டிக்காரனை சேலம் ஸ்டேட் பேங்கிற்கு ஒட்டச் சொன்னேன். பேங்கில் காசோலையைக் கொடுத்துப் பணமாக்கிக் கொண்டேன். திரைக்கதை வசனம் எழுதியிருந்த கையெழுத்துப்படிகளை அந்த பேங்கின் கூடத்தில் வீசியெறிந்தேன். அவன் ஒவ்வொரு தாளாகப் பொறுக்கி எடுத்துக் கொண்டு சென்றான். அதன்பிறகு நான் மாடர்ன் தியேட்டர்ஸ் வாயிற்படிகளை மிதிக்கவில்லை.” இந்த நிகழ்ச்சியைப் பாவேந்தர் சொல்லி முடித்தபோது என் உள்ளம் மிகவும் சங்கடப்பட்டது. அந்தக் காலத்தில் ரூ. 40,000/- சாதாரணத் தொகையா? இவ்வளவு பெருந்தொகையை உணர்ச்சி வசப்பட்டு அனாவசியமாக உதறியெறிந்து விட்டு வந்த பாவேந்தர் செயலை மானவீரம் என்று சொல்வதா? அல்லது பயித்தியக்காரத்தனம் என்று சொல்வதா? என்னால் முடிவு கட்ட முடியவில்லை. இன்றையத் திரைப்பட எழுத்தாளர்கள் இயக்குநர்களின் விருப்பப்படி எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் கேட்காமலே மாற்றிக் கொள்ள இசைவளிக்கிறார்கள். இவர்களெங்கே! பாவேந்தர் எங்கே? 13.4.62 இன்று பாவேந்தர் கூறிய செய்தி எனக்குச் சற்று வியப்பிற்குரியதாக இருந்தது. ஏனென்று சொன்னால் இன்று கூறப்படும் நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டுள்ள கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அவர்கள் நாடறிந்த பெருங்கவிஞர் குழந்தையுள்ளம் படைத்தவர். இந்த நூற்றாண்டில் வாழ்ந்த சமகாலப் பெருங்கவிஞர் இருவரின் சந்திப்பு இப்படி முடிந்து விட்டதே என்று படிப்போர்க்கு வருத்தம் எழாமல்