பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 அந்தநாட்கள் பொருள்களையெல்லாம் வாங்கிக் கொண்டு வந்துவிட்டார். அவற்றின் விலை ரூ.50/-க்கு மேல் இருக்கும். அப்போது பாவேந்தருக்கு இருந்த பணத்தொல்லையில் அவர் ரூ.50/- செலவிட வேண்டியதில்லை. அவர் வீட்டிலிருந்த கோழிகளும் பேசாமல் நிலத்திலேயே இரையெடுத்துக் கொண்டு உடல் நலத்தோடு நன்றாகத் தான் இருந்தன. பாவேந்தரை யார் தடுக்க முடியும்? பாவேந்தருக்குப் புறாக்களையும் கோழிகளையும் வளர்ப்பதில் அளவு கடந்த விருப்பம். இவை கூடி இரையுண்ணும் அழகை விருப்பத்தோடுப் பார்த்துக் கொண்டிருப்பார். இந்த விருப்பத்தின் விளைவுதான் அவர் நமக்குப் படைத்துக் கொடுத்த புறாக்கள் கோழிகள் பற்றிய அழகான பாடல்கள். 24.4.62 இன்று பாவேந்தர் இல்லத்தில் பல அறிஞர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் காலஞ் சென்ற தமிழ்மறவர் பொன்னம்பலனார், புதுவை பா. முத்து, அறிவழகன் ஆகியோர். பாவேந்தரின் புதுவை மாணவர்களுள் கவிஞர்கள் வாணிதாசன், சிவப்பிரகாசம் எம்.பி., பா. முத்து ஆகிய மூவரும் முக்கியமானவர்கள். இந்த பா. முத்து புதுவைத் துறைமுகத்தில் ஏதோ ஒர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி சென்னை வந்து பாவேந்தரைப் பார்த்துச் செல்வது வழக்கம். வரும்போதெல்லாம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதியாகும் ஹார்லிக்ஸ், ஒவல், சிகரெட் ஆகியவற்றைக் கொண்டுவந்து கொடுப்பார். இன்றும் கொண்டு வந்திருந்தார். பாவேந்தர் இவரிடத்தில் மிகுந்த அன்போடு பழகுவார். பாவேந்தரின் அழகின் சிரிப்பைப் பின்பற்றி இயற்கை இன்பம்’ என்ற பெயரில் இவர் ஒரு நூல் எழுதியிருக்கிறார். பாவேந்தரைப் பார்க்க வந்திருந்தபோது இவருக்கு வயது நாற்பது இருக்கும். இப்போது இவர் உயிருடன் இல்லை. சுயமரியாதை இயக்கத்தில் பொன்னம்பலனார் இருவர். ஒருவர் பூவாளுர் அ. பொன்னம்பலனார்; மற்றொருவர் தமிழ் மறவர் பொன்னம்பலனார். இன்று பாவேந்தரைப் பார்க்க வந்திருந்தவர் தமிழ் மறவர் பொன்னம்பலனார். வேலூர் கண்டர் உயர்நிலைப் பள்ளியிலும், சேலம் நகரவைப் பள்ளியிலும் நீண்டநாள் தமிழாசிரியராகப் பணியாற்றியவர். இறுதி நாட்களில் திருச்சி