பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 அந்தநாட்கள் இச்செயற்குழுக் கூட்டம் தமிழ்க் கவிஞர் பெருமன்றச் சார்பில் சித்திரை முதல் நாள் குயில் கவிதை இதழை வெளியிட முடிவு செய்தது. கூட்டத்துக்கு வந்திருந்த கவிஞர்கள் சென்ற பிறகு நானும் பாவேந்தரும் உணவருந்திவிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம். எங்கள் பேச்சு, கவிஞர்களின் சில விநோதமான நடவடிக்கைகளின் பால் திரும்பியது. பாரதி கடையம் அக்ரகாரத்தில் கழுதைக் குட்டியை அணைத்து முத்தமிட்டது பற்றியும், இரவு நேரங்களில் கடற்கரையில் படுத்துக்கொண்டு வானத்தை விடியும் வரையில் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது பற்றியும் பாவேந்தர் கூறினார். ஆங்கில நாட்டுப் புரட்சிக் கவிஞனான ஷெல்லியைப் பற்றி நான் ஒரு செய்தி சொன்னேன். நீராடிக் கொண்டிருந்த ஷெல்லி திடீரென்று எதையோ நினைத்துக் கொண்டு அருகிலிருந்த தன் இல்லத்துக்கு அப்படியே பிறந்தமேனியாகத் திரும்பி வந்தான். வரவேற்பு அறையில் ஷெல்லியின் மனைவி மேரி தன் நண்பர் களோடு உரையாடிக் கொண்டிருந்தாள். அவர்களைச் சட்டை செய்யாமல் இவன் தன் அறையை நோக்கிச் சென்று கொண்டிருந் தான். மனைவி என்ன இது? என்று கூச்சலிட்ட பிறகுதான் தன் நிலையை ஷெல்லி அறிந்தான். இதை நான் கூறியதும் தம்முடைய வாழ்க்கையிலும் இவை போன்ற நிகழ்ச்சிகள் உண்டு என்று பாவேந்தர் சிலவற்றைக் குறிப்பிட்டார். "பாண்டிச்சேரி சட்டசபையின் மாடிப்படி வழியில் அழகான ஒர் ஒவியம் வைக்கப்பட்டுள்ளது. அது ஒரு பிரெஞ்சு ஓவியரால் தீட்டப்பட்டது. மனச்சாட்சியின் தீர்ப்பு' என்பது அப்படத்தின் பெயர். ஒருவன் கொலை செய்துவிட்டுக் குருதிக் கறைபடிந்த கத்தியோடு போகிறான். இடது கையில் மெழுகுவர்த்தியைத் தாங்கிய ஒரு பெண் தேவதை குற்றவாளியைத் தண்டிப்பதற்காக வலது கையில் ஒரு வாளை ஓங்கிய வண்ணம் இருக்கிறது. இந்தப் படத்தை நான் எத்தனையோ முறை பார்த்துச் சுவைத்திருக்கிறேன். என்றாலும் ஒவ்வொரு முறையும் படியேறும் போதெல்லாம் அப்படியே படத்தின் எதிரில் நின்று விடுவேன். பின்னால் வருபவர்கள் எனக்கு உணர்த்தினால்தான் அவ்விடத்தை விட்டு நகருவேன். பார்ப்பவர் உள்ளத்தைத் தன்பால் ஈர்க்கும் ஆற்றல் அப்படத்துக்கு உண்டு. ந்ெதிய் இந்தச் செய்தி சிறந்த பிரெஞ்சு எழுத்தாளனான ஆண்ட்ரூ மொராய் ஷெல்லியைப் பற்றி எழுதியுள்ள ஏரியல், என்ற வாழ்க்கை வரலாற்று நூலிலும் கூறப்பட்டுள்ளது.