பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 முருகுசுந்தரம் வெற்றிகண்ட கவிஞர் பாவேந்தரைத் தவிர வேறு யாருமில்லை" என்று பெருமிதம் தோன்ற எழுதியுள்ளார். நீண்ட ஆண்டுகளாக இந்நூல் மறுபதிப்பு செய்யப்படாமல் வாளாயிருந்தது. ஆகவே, இந்நூலைப் பாரதிதாசன் பல்கலைக்கழக வெள்ளிவிழாவின்போது வெளியிடுமாறு கவிஞர் முருகுசுந்தரம் கேட்டுக் கொண்டார். இந்நூலின் செறிதிறனும் புலப்பாட்டு நெறியும், சிறப்புவாய்ந்த நிலையில் அமைந்துள்ளதால், பாரதிதாசன் பல்கலைக்கழகம் பதிப்புத்துறை வாயிலாக மறுபதிப்பு செய்து வெளியிடுகிறது. தமிழ் ஞாலம் போற்றும் எழுத்து ஏந்தல் இப்போது நம்மிடை இல்லை. ஆயினும் அவருடைய படைப்பாற்றலை நிலைநாட்டும் வகையிலமைந்த இந்நூலை வெளியிடுவதில் மகிழ்வடைகிறேன். (மு.பொன்னவைக்கோ)