பக்கம்:பாவேந்தர் ஒரு பல்கலைக்கழகம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர்-ஒருபல்கலைக்கழகம் 99 கவிதை உணர்வுடையவரைத் தேர்ந்தெடுத்து ஊக்கியது. பாரதிதாசன் பரம்பரையை வளர்த்தது. பாவேந்தரின் மன உளைச்சலுக்குக் குயில் சிறந்த வடிகாலாகவும் விளங்கியது. அவர் பேனா முனையில் காயம்படாத அரசியல் தலைவர்களோ, தமிழறிஞர்களோ புதுவையிலும் தமிழகத்திலும் இல்லையென்று சொல்லலாம். அவருடைய துணிச்சல் எல்லையில்லாதது. அவரைப் போல் வேறு யாரும் அப்படி எழுதித் தமிழ்நாட்டில் தப்ப முடியாது. அவர் குயிலில் எழுதிய உரைநடைத் தொடர்கள் நறுக்கிய கரும்புத் துண்டுகள்; செய்யுளைவிடச் செறிவானவை. அவருடைய கூரிய சொற்கள் சுளிரென்று குதிரைச் சாட்டை உடம்பின் மீது விழுவது போல் இருக்கும். கவிஞர்களின் படைப்பாற்றலைப் பற்றி உலகில் இரு வேறுபட்ட கருத்துக்களைக் கூறுவர். சிறந்த கவிஞர்களின் படைப்புகள் அவர்களுடைய வாழ்க்கையின் முற்பகுதியிலேயே முற்றுப்பெற்று விடுகின்றன என்பது ஒரு சாரார் கருத்து. முதிர்ந்த நிலையிலும் உயர்ந்த படைப்புகள் தோன்றுவதுண்டு என்பது மற்றையோர் கருத்து. கீட்ஸ் தமது 24ஆம் வயதிற்குள் இறவாத இலக்கியங்களை எழுதிவிட்டு இறந்தான். ஷெல்லி தமது 28ஆம் வயதுக்குள் உலகப் புகழ் பெற்ற புரட்சிக் கவிதைகளை எழுதி முடித்தான். 30ஆம் வயதுக்குள் பைரனின் உயர்ந்த படைப்புகள் வெளிவந்து விட்டன. நம் நாட்டுப் பாரதியும் தமிழ்க் கவிதைத் துறையில் மாபெரும் புரட்சிகளைச் செய்துவிட்டுத் தமது 39ஆம் வயதில் உயிர் நீத்தார். ஆனால் கெதே தமக்கு உலகப்புகழைச் சேர்த்த மாகாவியமான பாஸ்துவைத் தமது முதிர்ந்த வயதான 80இல் எழுதி முடித்தார். அவர் தமது 74ஆம் வயதில் ஒரு 17 வயதுப் பெண்ணை மணக்க முடியாத வேதனையில் உணர்ச்சி வசப்பட்டு எழுதிய காதற்கவிதை தான் ஜெர்மானிய இலக்கியத்தில் சிறந்த காதற் கவிதையாக இன்றும் மதிக்கப்படுகிறது. மில்டன் தமது அமரகாவியமான 'சுவர்க்க 1. Goethe was now seventy-four. He was more affable than he had been in middle age, more gracious and more cordial... At Marienbad Goethe found a girl of seventeen, Ulrike Von Leventzow, whose acquiantance he had made two years before She was winning and graceful. He had found her attractive then he had found her more attractive now; and indefatigable amorist as he was he fell violently in love with her Ulrike was flattered by the attentions of this great end femous man and certainly found him fascinating He proposed marriage to her and it looks as though she did not refuse him, since he wrote to his family (to their dismay) to announce that marriage would shortly take place. But Ulrike's mother refused to consent to a match which, if she had any sense, must have seemed to her preposterously ill-assorted. Goethe was affended unhappy and deeply mortified. He left Marienbad. In the cerriage on the way home he wrote a poem, Élegie in which he descriped the emotion to which his love for Ulriske had given rise and his passionate regrettor what he lost. -W. Somerset Maugham fn Points to View