பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/96 பாவேந்தர் யார் வீட்டில் விருந்து சாப்பிட்டாலும், சுவை யாக சமைத்துப் போட்ட அவ்வீட்டுப் பெண்களைப் பாராட் டாமல் வருவதில்லை. அதுவும் இன்ன பொருள் இப்படிச் சுவையாக இருந்தது என்று விமர்சனம் செய்யாமல் வர மாட்டார். இந்தச் செய்தியைப் பாவேந்தரோடு தொடர்பு கொண்ட பல நண்பர்களின் வீட்டில் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். வீட்டில் இருக்கும்போது லுங்கியும் முண்டா பனியனும் போட்டிருப்பார். வெளியில் கிளம்பும்போது வேட்டியும் ஸ்லாக் சர்ட்டும் அணிந்து கொள்வார். கூட்டங்களுக்குச் செல்லும்போது .ெ வ ள் ளை மல்ஜிப்பாவும் தண்டும் அணிந்து செல்வார். முக்கியமான விழாக்களுக்குச் செல் லும்போது பூப்போட்ட காஷ்மீர் வுல்லன் அங்க வஸ்தி சத்தை மூலைவாக்கில் மடித்துக் கழுத்தின் இரண்டு பக்க மும் தொங்கும்படி போட்டுக் கொள்வார். இந்தக் கோலம் இவருக்கு மிகவும் பிடித்த திருக்கோலம். தலைக்குப் பூசிக் கொள்வதற்காக இவருக்குப் பெங்களுரிலிருந்து ஒருவர் தாழம்பூத் தைலம் கொண்டுவந்து கொடுத்துக் கொண் டிருந்தார். பாவேந்தர் நண்பர்களிடத்தில் குழந்தையைப் போல் ஒட் டுறவோடு பழகுவார்; அதே சமயம் குழந்தையைப் போல் எந்த நேரமும் அவர் கோபித்துக் கொள்ளுவார். பாவேந் தசைப் பார்க்க வந்தவர்களும், அவரிடம் முன்னுரைவாழ்த்துப்பா வேண்டி வந்தவர்களும் பல வேறுபட்ட அனுபவங்களை என்னிடம் கூறியிருக்கிருர்கள். அவை யெல்லாம் பாவேந்தர் அப்போதிருந்த மனநிலையைப் பொறுத்தது. அவருக்கு யாரையாவது பிடித்துவிட்டால், அவர்மீது அளவு கடந்த பரிவைக்காட்டித் திக்குமுக்காடச் செய்வது அவர் வழக்கம். நான் அவரோடு தொடர்பு கொண்டிருந்த மூன்ருண்டுகளில் ஒரே ஒரு முறை தான் என்னிடம் கோபித்துக் கொண்டார். 家 - - هم-میرم- - ... so on Mozo a.o. - - - ಘೀ;స్థితి வரும்போது; இங்கிகழ்ச்சி பற்றிப்