பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/100 வாழ்க்கையில் சேர்ந்திருக்கும். கி.பி. 1946 ஆம் ஆண்டு அவருக்கு நிதியளிப்பு விழாவில் ரூ. 24,500 வழங்கப் பட் டது. அக்காலத்தில் கால் லட்சம் என்பது சாதாரணத் தொகையன்று. கணிசமான பெரிய தொகை. பாவேந்தர் வாழ்ந்த காலத்தில் கவிதை, உரைநடை, நாடகம் என்று கிட்டத்தட்ட 60 நூல்கள் அவர் படைப்புக்களாக வெளி வந்தன. அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கவை பாரதி தாசன் கவிதைகள் (முதல் தொகுதி), பாண்டியன் பரிசு, எதிர்பாராத முத்தம், அழகின் சிரிப்பு, தமிழியக்கம் என் பன. புதுவைப் பெருமாள் கோயில் தெரு வீட்டை விலைக்கு வாங்கிய நேரத்தில் ஏற்பட்ட பண நெருக்கடி யால் மிகக் குறைந்த தொகைக்கு (ரூ. 4000/- என்று நினைக்கிறேன்) இந்த நூல்களின் பதிப்புரிமையைப் பதிப் பகத்தாருக்கு விற்றுவிட்டார். பிறகு இந்த நூல்களுக் கும் பாவேந்தருக்கும் எந்தவிதப் பொருளாதாரத் தொடர் பும் இல்லை. ஆல்ை இந்த நூல்களின் விற்பனையை வேறு எந்தத் தமிழ்க்கவிதை நூலும் எட்டிப் பிடிக்கவில்லை என் பது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் கவிதைகள் முதல் தொகுதி அவர் வாழ்ந்த காலத்திலேயே 15 பதிப்புகள் வெளிவந்துவிட்டது. இந்த வெற்றி எந்தத் தமிழ்க் கவிஞனுக்கும் இதுவரை கிட்டவில்லை. இவ்வளவும் நான் எதற்காகச் சொல்லுகிறேன் என்ருல், இந்நூல்களின் விற் பனையில் பாவேந்தர் எவ்வளவு ஏமாளியாக நடந்து கொண்டார் என்பதைக் குறிப்பிடத்தான். தாம் கதை வசனம் எழுதிய வளையாபதி திரைப்படத்தில் சில வரி களை மாற்றி விட்டார்கள் என்பதற்காக மாடர்ன் தியேட் டர்லாரின் ரூ. 40,000 ஒப்பந்தத்தைத் துக்கி எறிந்து விட்டு வந்த செயல் பணவிஷயத்தை அவர் எவ்வளவு லேசாக எடுத்துக் கொண்டார் என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு. ஆபத்துக் காலங்களில் எளியவருக்குப் பொருள் கொடுத்து உதவும் தாராள நோக்கும் அவரிடத்தில் உண்டு. பாவேந் தர் சென்னையில் குடியிருந்தபோது வீட்டில் வேலை செய்து