பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்|111 பிறகு அதைக் கடன் கொடுக்கும் சேட்டிடம் காட்டி அவன் பணத்தை வைத்துக் கொண்டு படத்தை முடிக்க வேண்டும். இது தான். செப்பிடு வித்தை. இதைச் செய் வதற்குத் தமிழ்நாட்டுப் பாவேந்தர் தேவைப்படவில்லை. C பாவேந்தருடைய கடவுட் கொள்கை பற்றி நானறிந்த ஒரிரு செய்திகளை இங்கே குறி ப் பி ட விரும்புகிறேன். பாவேந்தர் இளமையில் முருகபக்தர். மயிலம் முருகன் மீது அவர் பாடிய சுப்பிரமணியர் துதியமுது அதற்குச் சான்று. பள்ளிமாணவராய் இருந்த நாட்களில் பாவேந் தர் பஜனைப் பாடலும் பாடியதுண்டு. இளமையிலே பாவேந்தர் உள்ளத்தில் ஊறிப் போயிருந்த இந்தச் சைவப்பற்று விட்டகுறை தொட்ட குறையாகப் பிற்காலத்திலும் அவரிடம் கொஞ்சம் ஒட்டிக் கொண்டி ருந்ததாகச் சிலர் குறிப்பிடுவதுண்டு. அதல்ை தான் தாம் எழுதிய 'எதிர்பாராத முத்தம் காப்பியத்தின் இரண் டாம் பகுதியில் சைவத்துக்கும் குமரகுருபரர்க்கும் வக்கா லத்து வாங்கிப் பாடியிருக்கிருர் என்று கூறுவர். இன்னும் சிலர் பாவேந்தர் "புரட்சிக்கவி' யில் பாடியுள்ள 'வாணி அமைத்திட்டாள் நற்கவிதை; மழை போல் பெய்தான்' என்ற சொற்ருெடரைக் காட்டி அவரையறியாமல் அவ ருள்ளத்தில் அரும்பிய கடவுட்பற்றைக் குறிப்பிட்டுக் காட்டுவர். 30.9-60 வெள்ளி மாலை 6மணியளவில் புதுவை வாணி நிலையத்தில் நடைபெற்ற கலைமகள் விழாவுக்குப் பாவேந்தர் வந்து சிறப்பித்தார்' என்ற ஒரு .ெ ச ய் தி 11-10-60 இல் வெளியான குயில் ஏட்டில் வெளியாகியி ருந்தது. ‘எங்கெங்குக் காணினும் என்று தொடங்குவது அவரது சக்திப்பாட்டு. பாவேந்தர் 1930 இல் வெளியிட்ட “கதர் இராட்டினப் பாட்'டில் 'கண்ணன் வழிப் பிறந்த சாதி” என்ற கண்ணன் பாராட்டு வரி தென்படுகிறது. பாவேந்