பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுக்தரம்1131 பாவேந்தர் மகன் கோபதி அருகிலிருந்த சுவரில் தலையை மோதிய வண்ணம் 'பாவிகளா! சினிமா ஆசையைக்காட்டி எங்கப்பாவைக் கொன்னுட்டீங்களே! என்று கதறிக் கொண்டிருந்தார். கவிஞர் பொன்னடி அருகிலிருந்து கோபதிக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார். தமிழ் நாடு-புதுவை மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய அரசியல் வாதிகளும், கவிஞர்களும், புலவர்களும் பெருமாள் கோயில் தெருவெங்கும் நின்று கொண்டிருந்தனர். பாவேந்தரின் இறுதி ஊர்வலம் அவர் வீட்டிலிருந்துகாலை பத்து மணிக்குத் துவங்கியது. மகாகவி பாரதி திருவல்லிக் கேணியில் இறந்தபோது அவரை அடக்கம் செய்வதற் காகப் புறப்பட்ட ஊர்வலத்தில் முப்பது பேர் தாம் கலந்து கொண்டதாக ஓர் அன்பர் செய்தித்தாளில் ஒருமுறை வருந்தி எழுதிக் கண்ணிர் வடித்திருந்தார். ஆளுல் பாவேந்தரது இறுதிப் பயணத்தில் 10, 000 பேர் கலந்து கொண்டார்கள். ஊர்வலம் ஒரு மைல் தூரம் இருந்தது. பாவேந்தரின் எழுத்துச் சாட்டைக்கு அடிக்கடி இலக்கான புதுவை முதலமைச்சர் குபேர் வழியில் பாவேந்தருக்கு மாலையிட்டு வணங்கினர். வேறு இரண்டு புதுவை அமைச் சர்கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கூட்டம் நடுப் பகல் 12 மணிக்கு மயானத்தை அடைந்தது. எந்தச் சடங் குகளும் இல்லாமல் பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்டார். பாவேந்தர் அடக்கம் செய்யப்பட்ட போது கவிஞர் பொன் னடியான் கையில் ஒரு பெரிய மாலையுடன் நின்று கொண் டிருந்தார். பாவேந்தர் சடலம் குழியில் இறக்கப் பட்ட போது மிகவும் கவனமாகக் கையிலிருந்த மாலையைப் புதைகுழியில் போட்டார். நான் அருகில் நெருங்கிக் கேள் விக்குறியோடு அவரைப் பார்த்தேன். “பாவேந்தரின் அன்புக்குரிய ஒர் அம்மையார் சென்னை யில் இம்மாலையை என் கையில் கொடுத்து மறக்காமல் அவர் உடலோடு இதையும் சேர்த்துப் புதைக்குமாறு வேண்டிக்கொண்டார்' என்று கூறிஞர் பொன்னடி.