பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுகந்தரம்/13 தும் பொன்னடி உள்ளே சென்று நான் வந்திருப்பதாகச் சொன்ஞர். பாவேந்தரும் நேராக வரவேற்பு அறைக்கு வந்தார். அப்போது முன்னிரவு ஏழு 'மணி. மின்விளக்கு வெளிச்சத்தில் அவர் தோற்றம் மிகவும் எடுப்பாக உள்ளத் தில் சட்டென்று பதியும்படியாக இருந்தது. இடுப்பில் 'பச்சை நிற லுங்கி; மேலே திறந்த மேனி. வரும்போதே கன்த்துக் கொண்டு வந்தார். கனப்பொலியைக் கேட்ட வுடன் என்னையறியாமல் நான் எழுந்து நின்றுகொண் டேன். அவருடைய நடையிலும் தலைநிமிர்விலும் உல கையே அலட்சியம் செய்யும் அசாதாரண நிலை தென்பட் டது. என் அருகில் வருவதற்கு முன்பாகவே, அவர் விழி கள் என்னை நிமிர்ந்து பார்த்த பார்வை என்ன? யார் நீ?: என்று கேட்பது போல் இருந்தது. அவர் என்னை வாய்திறந்து கேட்பதற்கு முன்பாக அவசரப் பட்டுச், 'சேலம் சங்கரன் க டி த ம் கொடுத்திருக்கிருர்: என்று சொன்னேன். - "அப்படியா? படி' என்ருர். நானும் கடிதத்தை நின்று கொண்டே படித்தேன். படித்து முடித்ததும் தாம் அமர்ந்' திருந்த சோபாவைக் காட்டி ‘'இப்படி வந்து உட்கார்’ என்று சொன்னுர். நானும் அடக்கத்தோடு சோபாவின் நுனியில் அமர்ந்த வண்ணம் அவரைப் பார்த்துக் கொண் டிருந்தேன்.

  • உன் பேர்?’’ "முருகுகந்தரம்."

அதற்குள் பொன்னடி குறுக்கிட்டு 'இவர் குயிலிலே அடிக் கடி எழுதியிருக்கிருர்' என்று சொன்னர். - "அப்படியா! என்ன படிச்சிருக்க?" 'புலவர்; எம்.ஏ.' "'என்ன கையிலே புத்தகம்?"