பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/14 'இது நான் எழுதின பள்ளிப் பாடப் புத்தகம். இதிலே நாமக்கல் கவிஞர் உங்களைப் பற்றி எழுதிய பாடலையும் சேர்த்திருக்கிறேன்' என்று சொல்லி அப் பாடலைப் படித் துக் காட்டினேன். 'பாடல் சரியான இடத்திலதான் இருக்குது. ஆமா!.இதை எப்படி விட்டானுங்க? அப்ரூவ் ஆயிடுச்சா? விடமாட் டானுங்களே!' என்று வியப்போடு கேட்டார். 'அப்ருவ் ஆகிவிட்டது; பல பள்ளிகளிலும் பாடமாக வைத்திருக்கிருர்கள்’’ என்று நான் சொன்னேன். அவர் என்னை மகிழ்ச்சியோடு பார்த்தார். நான் உங்கள் மீசையைப்பற்றிப்பத்து எண்சீர் விருத்தம் எழுதியிருக்கிறேன்” என்று சொன்னேன். 'ஏன்?' என்ருர் பாவேந்தர். 'இங்கிலாந்தில் வொர்ட்ஸ்வொர்த் என்ற கவி ஞ ன் வாழ்ந்தபோது அவன் மூக்கைப்பற்றிக் கவிதைபாடிச் சிறப்பித்தார்கள். கீட்சின் தலைமுடி பொன்னிறமானதா கருநிறமானதா என்று ஆராய்ச்சி நடத்தினர்கள். இந் நூற்ருண்டின் இணையற்ற கவிஞராகிய உங்கள் மீசையைப் பற்றி ஒரு கவிதை பாடினல் என்ன என்று எண்ணினேன்; எழுதினேன்' என்று நான் சொன்னேன். 'அப்படியா! எங்கே படி!' என்ருர். நானும் படித்தேன். அந்தப் பத்து எண்சீர் விருத்தத்தையும் பொறுமையோடு கேட்டுவிட்டுக் 'கற்பனையெல்லாம் ரொம்ப நல்லா இருக் ඵ්ද්‍රිl-••••• ஆமா...சாப்பிட்டயா’’ என்ருர். 'இல்லை ஐயா. நான் கல்லூரி விடுதிக்குச் சென்று சாப் பிட்டுக் கொள்கிறேன்' என்றேன். உடனே 'தாயாரு! தாயாரு!’ என்று சமையற்காரியை அழைத்தார். 'தாயாரம்மாள்' என்பது அந்த அம்மையார் பெயர்.

  • காண்க: பிற்சேர்க்கை.