பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/21 உருவாக்குவது இம்மன்றத்தின் முதல் நோக்கம். அவர்கள் பாடல்களையெல்லாம் ஒன்ருகத் திரட்டி நூலாக வெளியிட வேண்டும். அப்பாடல்களை ஆங் கிலத்திலும் பிற மொழிகளிலும் பெயர்க்க வேண்டும். தில்லிக்கும், பிற மாநிலங்களுக்கும் தமிழே அறியாத சிலர் தாங்கள்தாம் தமிழ்க் கவிஞர் களின் முகவர்கள் என்று கூறிக்கொண்டு செல்கின் ருர்கள். அத்தகைய வேற்று மாநில மன்றங்களுக்குக் கவிஞர் மன்றம் தனது முகவரை அனுப்பவேண்டும்."

அனைத்துலகத் தமிழ்க்கவிஞர் பெருமன்றத்தின் சார்பில் திங்கள் இருமுறை இதழாகக் குயில் மீண்டும் துவக்கப்பட் டது. மன்றத்தின் குரலாக இக்குயில் கூவியது. 16 காசு விலை கொண்ட இந்த 16 பக்க இதழ் சென்னை இராமன் தெரு பாவேந்தர் இல்லத்தில் திருவள்ளுவராண்டு 1993 சித்திரைத் திங்கள் 2ஆம் நாள் (15-4-62) வெளிவந்தது. எட்டு இதழ்களோடு 1-8-62இல் இது தன் வரலாற்றை முடித்துக் கொண்டது. இந்த எட்டு இதழ்களும் குறிப்பி டத் தக்கவை.இவற்றில் தகுதிவாய்ந்த 21 இளங் கவிஞர் கள் படத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டார்கள். பாவேந் தரும் வாரந்தோறும் நிறைய எழுதிஞர். பாவேந்தரின் அன்புக் கட்டளையின்பேரில் அவருடைய பாடல்கள் மூன் றினை நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன்; அவை களும் வெளியாகியிருக்கின்றன. 1-8-62இல் வெளியான இறுதி இதழ்தான்.பாவேந்தர்தம் வாழ்நாளில் கடைசியாக வெளியிட்ட கவிதை இதழ். இவ்விதழில் எழுதியுள்ள இளங் கவிஞர்களின் ஒவ்வொரு பாடலும், பாவேந்தரின் 'சிறப்புக்கவி' என்னும் அணிபூண்டு அழகுற வெளியாகி யுள்ளன. இக்கடைசிக் குயில் வரிசையின் முதல் இதழ், திருமிகு தமிழகத் தக்லநகர் ஆன சென்னையிற் பன்னூறு கவிஞர் சேர்ந்த அனைத்துலகத் தமிழ்க் கவிஞர் பெருமன் றத்தின் சார்பில் முத்தமிழ்ப் புத்தமிழ்து