பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/22 பாடுங் குயில்! இது பதினைந்து நாட்கள் தேடுவார் அடையும் தேடருஞ் செல்வம். கலகக் கட்சிக ளில்தலை விடாது வலிய வரும்சண் டையையும் விடாது; குயிலின் கொள்கையும் குயிலை உடைய பெருமன் றத்தின் கொள்கையும் இதுவே என்று தன்னைத் தலையங்கத்தில் அறிமுகப்படுத்திக் கொண் டது. இத் தலையங்கத்துக்குக் காரணம் நானும், மன்றத் துவக்க விழாவுக்கு வந்திருந்த வேறு சில நண்பர்களும் 'ஐயா! நீங்கள் நாட்டுக்குப் பொதுவானவர்; தமிழரின் பொதுச் சொத்து. உங்களுக்கு இனிக் கட்சி அரசியல் வேண்டாம்” என்று வற்புறுத்திக் கூறியதுதான். பிறவி அரசியல்வாதியான பாவேந்தரால் அரசியல் இல்லாமல் இருக்க முடியுமா? திராவிட முன்னேற்றக் கழகம் விலை வாசிப் போராட்டத்தில் ஈடுபட்டது. நாடெங்கிலும் ஆயி ரக் கணக்கான தோழர்கள் மறியல் போராட்டத்தில் ஈடு பட்டுச் சிறை சென்றனர். போராட்டக் காலத்தில் நாட் டில் சில அசம்பாவிதங்கள் நடைபெற்றன. உடனே பாவேந்தரின் அரசியல் பேணு நெருப்பைக்கக்கத் தொடங் கியது. 1-8-62இல் வெளியான கடைசிக் குயில் கீழ்க் கண்ட அரசியற் கண்டனப் பாடலோடு முற்றுப்பெற்றது. மணப்பக்த லுக்குத்தீ வைத்தார் கழகப் பிணப்பந்த லுக்குக்கால் கட்டார்- பணத்துக்குத் தீட்டிய திட்டம் சிவசிவா! ஊர்ப்பெயரால் ஒட்டிய ஓட்டைவண்டி தூள். Ο கவிஞர் பெருமன்றத் துவக்கவிழா முடிவுற்றதும் வத் திருந்த கவிஞர்கள் யாவரும் மாலை ஆறுமணியளவில் பாவேந்தரிடம் விடைபெற்றுச் சென்றனர். நான் மட்டும் அங்கு இருந்தேன். இரவு எட்டு மணி ஆயிற்று. நீண்ட