பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்|34 காலத்தில் இயல்பாகவே கூர்மையான அறிவு படைத்த வன் என்று என்னை ஆசிரியர்கள் பாராட்டுவார்கள். கணக் கும் கட்டுரையும் அப்போது பள்ளிகளில் முக்கியப் பாடங் களாகக் கருதப்பட்டன. என்னுடைய தொடக்கக் கல்வி திருப்புளிசாமி ஐயாவின் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் துவங்கியது. திருப்புளிசாமி ஐயா சாத்தானி (பூணுரல் சாத்தாத வைணவர்) வகுப்பைச் சேர்ந்தவர். என் மீது அவருக்கு அளவு கடந்த பற்றுண்டு. அவரிடத்திலேயே பல நூல்களைப் பாடங்கேட்டேன். அதன் பிறகு கால்வே கல்லூரியில் தமிழ்ப்புலவர் தேர்வுக்குப் படித்தேன். எனக்குக் கணக்கு மிக நன்ருக வரும். நாள்தோறும் புல வர் வகுப்பு மாணவர் எல்லாரும் வழக்கமாக ஓரிடத்தில் கூடுவோம். சிலர் கேரம், சிலர் சொக்கட்டான், சிலர் கடு தாசி (சீட்டு) விளையாடுவார்கள். புலவர் வகுப்பு மாணவர் களுள் உருவத்தில் நான் சிறியவன்; படிப்பில் பெரியவன். நான் சிறியவகை இருந்ததால் என் நண்பர்களுக்குத் தின்பண்டம், சிகரெட் முதலியவை நான்தான் வாங்கிக் கொண்டுவந்து கொடுப்பேன். எங்கள் வகுப்புக்கு நல்ல 'ரிசல்ட் வரவேண்டும் என்பதற்காக ஆசிரியர்களின் ஒப் புதலோடு தேர்வு நடக்கும்போது கட்டுரைக்குப் பல படி கள் எடுத்து மற்ற மாணவர்களுக்கும் நான் கொடுப்ப துண்டு.அதைப்பார்த்து எழுதிப்பல மாணவர்கள் வெற்றி பெறுவது வழக்கம். ஒருமுறை தேர்வு நடந்து கொண் டிருந்தபோதே திருப்புளிசாமி ஐயா தேர்வுக் கூடத்தின் வாயிலில் வந்து மகிழ்ச்சியோடு 'டே சுப்புரத்தனம்! நீ கட்டுரையில் முதல்வகை வெற்றிபெற்றிருக்கிருய், நீ கட் டுரையில் 20க்குப் 18' என்று தேர்வு முடிவு வெளியாவ தற்கு முன்பே வந்து கூச்சலிட்டார். நான் சாடை செய்து அவரைப் பேசாமல் போகும்படி கூறினேன். புலவர் தேர்வில் முப்பது பேருக்கு மேல் வெற்றி பெற்ற னர். ஆளுல் முதன்மையாக நான் வெற்றிபெற்றது மற்ற வருக்குத் தெரியாது. நானும் வெளியில் சொல்லவில்லை.