பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தரம்/37 口 5–2–62 திங்கள் 口 எனக்குக் கல்லூரி வகுப்புகள் பிற்பகல் மூன்று மணியோடு முடிவடைந்துவிட்டன. மாணவர் விடுதியில் சிற்றுண் டியை முடித்துக் கொண்டு தியாகராய நகருக்குப் புறப் பட்டேன். பாவேந்தர், பங்களா முற்றத்தில் (Portico) பிரம்பு நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுத்துக் கொண்டி ருந்தார் : நானும் மற்ருெரு நாற்காலியை அவரருகில் எடுத்து போட்டு உட்கார்ந்தேன். முதன்முதலில் ஆசிரி யர் பணிசெய்த நிரவி வாழ்க்கையைப் பற்றிக் கூறும்படி கேட்டேன். அவரும் நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கிளுர். - "நிரவியில் ஆசிரியர்பணி ஏற்றுக்கொண்டபோது எனக்கு வயது 18 முடிந்து சில திங்கள்கள் ஆகியிருந்தன. நிரவி பிரெஞ்சு ஆளுகைக்குட்பட்ட ஒரு சிற்றுார். அங்கு வன்னி யரும் பிள்ளைமாரும் குடியிருந்தனர். நான் உருவத்தில் மிகவும் சிறியவனுக இருந்த காரணத்தால், என்னை ஓர் ஆசிரியனுகவே அவ்வூர் ம க் க ள் பொருட்படுத்தமாட் டார்கள். பள்ளி முடிந்து செல்லும் போது வீதி வழியாக வரும் பெண்கள் 'இதோ போருனே பொடிப்பய, இவந்தா நம்ம ஊர்ப்பள்ளி வாத்தியாராம்!' என்று என் காதில் விழும்படியாகவே சொல்லுவார்கள். நிரவி அப்போது நகரத்து நாகரிகம் பரவாத சிற்றுார். புதுவையிலிருந்து என்னைப்பார்க்க நண்பர்கள் யாராவது முழுக்கால் சட்டை அணிந்து வந்தால் ஊர்மக்கள் கூட் டம் கூடிக்கொண்டு பார்ப்பார்கள். பொதுவாகச் சட்டை