பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/46 பிரெஞ்சு ஆசிரியர்கள் கட்சிக்கு வெங்கடகிருஷ்ண நாயுடு என்பவர் தலைவர்; அவர் புதுச்சேரித் தலைமைப்பள்ளியின் முதல்வர் (Principal). தமிழாசிரியர்கள் கட்சிக்கு நான் தலைவன். சமயம் வரும்போது ஒருவரையொருவர் காலை வாரிவிடுவது எங்களுக்குள் வழக்கம். ழுய்ல் ஃபெரி (jules Fery) என்பவர் 19 ஆம் நூற்ருண் டில் பிரெஞ்சு நாட்டில் வாழ்ந்த பெரிய சமுதாய சீர் திருத்தவாதி. கல்வித்துறை சமய வாதிகளின் கையில் இருந்ததை அவர் கண்டித்தார். 'பாதிரியார் கைவில் கல் விக் கூடங்கள் இருப்பதால் ஏழை எளியவருக்குக் கல்வி எட்டவில்லை. கல்வியை எல்லாரும் பெருவிட்டால் ஏழை ஏழையாகவும், பணக்காரன் பணக்காரளுகவுமே இருக்க நேரிடும். கல்விக் கூடங்களைப் பாதிரிமாரிடமிருந்து பிடுங்கி அரசாங்கமே ஏற்று நடத்தில்ை குடியரசின் முழுப் பயனை நாட்டு மக்கள் எல்லாரும் நுகர முடியும்' என்று அவர் பிரசாரம் செய்தார். பாதிரிமார்கள் அரசாங்கத் திடம் கோள் சொல்லியும், தம் செல்வாக்கைப் பயன்படுத் தியும் முய்ல் ஃபெரியை நாடுகடத்தி விட்டனர். முய்ல் ஃபெரி வெளிநாட்டில் இருந்து கொண்டே தம் பிரசா ரத்தை ஒய்வின்றிச் செய்து வந்தார். பின் நாட்டுத் தலை வராகிக் கல்வியைச் சமய ஆதிக்கத்திலிருந்து மீட்டு அர சாங்கத்தின் பொறுப்பில் கொண்டுவந்தார். அதிலிருந்து பிரெஞ்சு நாடு முய்ல் ஃபெரியைக் கல்விச் சீர்திருத்தத் தந்தை என்று போற்றுவது வழக்கம். ழுய்ல் ஃபெரியின் நூற்ருண்டு விழா வந்தது. அவ்விழா பிரெஞ்சு நாடு மட்டு மின்றி, பிரெஞ்சுக் குடியேற்ற நாடுகளிலும் கொண்டாடப் பட்டது. புதுச்சேரியிலும் அவ்விழா எல்லாப் பள்ளிகளின் சார்பிலும் விமரிசையாகக் கல்வித் துறைத் தலைவர்(சீஃப்) முன்னிலையில் கொண்டாடப்பட்டது. அவ்விழாவின்போது ஆடல், ப்ாடல், நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நாடகத்திற்காக ழுய்ல் ஃபெரியைப்பற்றி நான் பாடிய பாடல் ஒன்றும் மாணவர்களால் பாடப்பட் - لقيَ سا