பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் நினைவுகள்/48 இந்த நிகழ்ச்சியை அவர் கூறிமுடித்த போது இரவு மணி பன்னிரண்டிருக்கும். பாவேந்தர் 'பொன்னடி என்று குரல் கொடுத்தார். முன்கூடத்தில் இருந்த பொன்னடி எழுந்து ஓடிவந்தார். "இன்று வல்லுணவு எதுவு மில்லை. அதேைல பசியெடுத்துடுச்சு. ஏதாவது சாப்பிடணுமே” என்ருர். உடனே நானும் பொன்னடியும் ராஜகுமாரி திரைப்படக்கொட்டகை அருகில் இருந்த ஒரு விடுதியில் சென்று "முட்டை ஆம்லெட்' வாங்கி வந்து கொடுத் தோம்; சாப்பிட்டபின் உறங்கினர். [] 9—2–62 வெள்ளி [] இன்று மாலை 5 மணியளவில் கவிஞர் இல்லம் சென்றேன். கவிஞர் வெளியிலே புறப்படத் தயாராக இருந்தார். என் னையும் புறப்படும்படி சொன்னர். கவிஞரும், நானும், பொன்னடியும் தேளும்பேட்டை சென்று தமிழ்க்கவிஞர் பெருமன்றத்துக்கு பீரோ செய்வதற்குப் பலகை எடுத் தோம். பலகைக்கு ரூ. 74/-ம் அதை பீரோவாகச் செய் க்ேகூலி ரூ. 30ம் செலவாயிற்று. 'இது எதற்கு இப் போது வீண்செலவு' என்று நான் கேட்டதற்கு, “கவிஞர் பெருமன்றம் சம்பந்தப்பட்ட எல்லா ரெகார்டுகளும் தனி யாக ஓர் பீரோவில் இருக்க வேண்டும்’ என்று கூறினர். ஆளுல் இந்தத் தமிழ்க்கவிஞர் பெருமன்றம் ஆறு திங்கள் கள் கூட உயிர் வாழவில்லை. இம்மன்றத்தைத் துவக்கிய போது கவிஞர் காட்டிய ஆர்வம் அளவிட முடியாதது. இரண்டு முறை சென்னைக் கவிஞர்கள் இராமன் தெரு இல்லத்தில் கூடிய பொழுது தம் கைச்செலவில் சிற்றுண்டி