பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் கினைவுகள்/62 口 26–3—62 திங்கள் 口 தமிழகச் சட்டசபைத் தேர்தல்கள் முடிவுற்றன. கடந்த ஒருவார காலமாகத் தேர்தல் ஆரவாரங்களிடையே பாவேந்தரைப் பார்க்க முடியவில்லை. நான் மாலை 4 மணி யளவில் பாவேந்தர் இல்லம் சென்றேன். என்னைக் கண்ட தும், 'உன் தம்பியைப் பார்க்கப் போகணும்; புறப்படு' என்ருர். என்தம்பி இளங்கோவன் அப்போது ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். பாவேந்தருக்குச் சர்க்கரைநோய் இருந்ததால் வாரம் ஒரு முறை அவருக்கு வேண்டிய இன்சுலின் ஊசிமருந்து, வேறு தேவையான மாத்திரைகள் ஆகியவற்றை எடுத்து வைத்திருந்து அவனே வீட்டிற்குக் கொண்டுவந்து கொடுப்பான். சில சமயங்களில் பாவேந்தரே அவன் விடு திக்குச் சென்று வாங்கிக் கொண்டு வருவதும் உண்டு. ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் இவருக்கு மிகவும் வேண்டிய மற்ருெரு மாணவரும் அப்போது இருந்தார். அவர் பெயர் துரைசாமி; வட ஆர்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர். கவிதை எழுதுவார்; அடக்கமும் அளவு கடந்த தமிழ்ப்பற்றும் உடையவர். தற்போது மலேசியா வில் மருத்துவராகப் பணிசெய்து கொண்டு சிறப்பாக வாழ்கிருச். நானும் பாவேந்தரும் என் தம்பியின் விடுதியை அடைந் தோம். அன்று மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் ஆண்டுவிழா. பாவேந்தரும் நானும் விருந்தில் கலந்து கொண்டோம். பிறகு மருந்தைப் பெற்றுக்கொண்டு வீடு திரும்பிைேம்.