பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் என்னும் பவளமல்லிகைச் செடியை கான் சென்னையிலும் சேலத்திலும் சுற்றிச் சுற்றி வந்தபோது அது தானுக உதிர்த்த மலர்களையும் கானே விரும்பிப் பறித்த மலர்களையும் மட்டுமே இந்நூலில் படைத்திருக்கிறேன். 'நீ ஒர் எழுத்தாளன் நான் இப்போது கூறும் செய்திகளைச் செய்தித் தாளிலோ நூலிலோ எழுதக் கூடாது' என்று எனக்கு எச்சரிக்கை விடுத்துப் பாவேந்தர் கூறிய செய்திகளும் உண்டு. அவர் ஆணைப்படி அவற்றை இந்நூலில் சேர்க்கவில்லை. பாவேந்தரின் கொள்கை பலருக்குப் பிடிக்காமலிருக்கலாம். ஏன்? அவர்iநடைமுறையும் கூடப் பிடிக்காமலிருக்கலாம்