பக்கம்:பாவேந்தர் நினைவுகள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகுசுந்தாம்!79 ருடைய பாடல்களை அடியோடு மாற்றி விட்டது. பாவேந் தரே இதை என்னிடம் குறிப்பிட்டார். பாவேந்தரும் தமிழ்மறவரும் முதன் முறையாக ஒரு திருமணத்தில் சத் தித்தனர். மறவர் பாவேந்தரைப் பார்த்து, 'கணியிடை ஏறிய சுளையும்-முற்றல் கழையிடை ஏறிய சாறும் பனிமலர் ஏறிய தேனும்-காய்ச்சுப் பாகிடை ஏறிய ருசியும்’ என்ற வரிகளை எடுத்துச் சொல்லி 'இதில் ருசி என்ற வட சொல் எதற்கு? ருசிக்குத் தமிழில் 'சுவை" என்ற அழகான சொல்லிருக்கிறதே. 'பாகிடை ஏறிய சுவையும்' என்றிருந் தால் நன்ருக இருக்குமே” என்று கூறினராம். பாவேந்தர் அதற்கு ஒப்பியதோடு அடுத்த பதிப்பில் மாற்றியும் விட் டார். பொன்னம்பலனுர் தொடர்பால் ஏற்பட்ட தனித் தமிழ்ப்பற்றுதான் 'தமிழியக்கம்' என்ற அருமையான் நூல் தோன்றக் காரணம். பொன்னம்பலஞர் தொடர்புக் குப்பின் எழுதப்பட்ட எல்லா நூல்களுமே பிறமொழிக் கலப்பின்றி எழுதப்பட்டன. பாவேந்தர் நூல்களில் பயிற்சி யுடைய எல்லாருக்கும் இவ்வுண்மை தெரியும். சித்ர நிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரத நற்புத்ரர்களைப் பற்றியன்ருே பூலோகம் தூற்றுவது போன்ற மணிப்பிர வாள நடை, பாவேந்தரிடமிருந்து அடியோடு விடை பெற்றுச் சென்று விட்டது. - பொன்னம்பலஞர் தம் மகளுக்குக் கல்லூரியில் எம்.எஸ்.சி. படிப்புக்கு இடம் வாங்குவதற்காக வந்திருந்தார். வந்த வர் பாவேந்தர் வீட்டில் வந்து தங்கினர். அன்று இரண்டு தமிழேறுகளும் முக்காரமிட்டுக் கொண்டிருந்தன. அன்று சில சொல்லாராய்ச்சிகளும் நடந்தன. முவ்வுரம்' என்பது தான் 'மும்மசம்' ஆயிற்றென்றும், மனம் வாக்கு காயம் ஆகிய மூன்றுமே முவ்வுரங்கள் என்றும் பாவேந்தர் கூறி ஞர். பஞ்ச பூதங்களையும் முகப்பது 'முகம்' என்றும், கதுவு வது கதவு' என்றும் பொன்னம்பலஞர் சொன்ஞர்.