பக்கம்:பாவேந்தர் படைப்பில் அங்கதம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாவேந்தர் படைப்பில் அங்கதம் ஈண்டுப்பிற நாட்டிலிருப்போர் - செவிக்கு ஏறியதும் இச்செயலைக் காறி யுமிழ்வார் என்று தீண்டாமையின் இழிவைச் சுட்டிக் காட்டுகிறார். ‘ஆலய உரிமை' என்னும் பாடலில் தாழ்த்தப் பட்டோருக்கு நுழைவுரிமை மறுக்கப்படுவதை வன்மையாகக் கண்டித்து, உயர்ந்தவர் கையில் வரத்தினைச் சாமி ஒளிமறைவில் தரத்தான் - மிகப் பயந்திழிந்தோர்களைக் கோயில் வராவண்ணம் பண்ணினதோ அறியேன். தாழ்த்தப் பட்டார்க்குத் தனிக்கோயில் நன்றெனச் சாற்றிடும் தேசமக்கள் - அவர் வாழ்த்தி அழைக்கும் சுதந்தரம் தன்னை மறித்திடும் நாச மக்கள். முப்பது கோடியர் பாரதத்தார் இவர் முற்றும் ஒரேசமுகம் - என ஒப்புந் தலைவர்கள் கோவிலில் மட்டும் ஒப்பாவிடில் என்ன சுகம்? என்று பாடுகிறார் பாவேந்தர். பெண்ணுரிமை பற்றிப் பாரதிதாசன் பாடிய அளவு வேறு எந்தக் கவிஞரும் பாடவில்லை. கைம்மை மணத்தை ஆதரித்துத் தமிழில் முதன்முதலாகக் கவிதை படைக்கும் துணிச்சல் பாரதிதாசனுக்கு மட்டுமே இருந்தது. "ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கியில் வையம் தழைக்கும்’ என்றும், எட்டும் அறிவினில் ஆணுக்குப் பெண்ணிங் கிளைப்பில்லைகாண்” என்றும் விடுதலைக் கும்மி பாடினார் பாரதி. பாரதிதாசனும் 1923 ஆம் ஆண்டில் வெற்றி நெருக்கம்’ என்ற தலைப்பில் தேச சேவகன் என்ற இதழில் ஒரு கும்மிப்பாடல் பாடினார்.