பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

üU கண்டித்து வெளியிட்ட அறிக்கை பத்திரிகையில் காணப் பட்டது. - - 'டாக்டர் ராஜன் ஆரோக்கியத்துக்கு ஆகாது என்று கண்டிக்கிருரா? அல்லது பகுத்தறிவுக் கொள்கை காரண மாகக் கூறுகிருரா?' என நான் சிந்தித்தேன். கவிஞரிடம் இந்த விவரத்தைக் கூறினேன். 'மகாமக விழா சைவசமயத் தொடர்புடையது; டாக்டர் ராஜன் வைஷ்ணவர். அதனல், அதைக் கண்டித்து எதிர்ப்புத் தெரிவிக்கிருர்’ என்ருர் கவிஞர். நான் குழம்பிய இரண்டு காரணமும் அல்லாமல், மூன்ருவதான ஒரு காரணத்தைக் கூறிவிட்டார் கவிஞர். 24 ஐஸ் கிடைக்கவில்லையாம் ! புதுச்சேரியில் பெரியசாமி என்பவர் கவிஞர் வீட்டுக்கு தினமும் வருவார். அன்பாகப் பழகுவார். கவிஞர் எங்கே சென்ருலும் பெரியசாமியும் கூடவே செல்வார். பெரியசாமி கவிஞரைப் போலவே பேசுவார். ம்றைவிலிருந்து பெரிய சாமி பேசில்ை, கவிஞர் பேசுவது போலவே இருக்கும். ஒரு சமயம் கவிஞர் காரைக்காலுக்குச் சென்ருர். பெரியசாமியும் உடன் சென்ருர். அங்கே இருவரும் ஒரு அறையில் தங்கினர்கள். இரவு நேரம். ஐஸ் வேண்டும் என்று கவிஞர் விரும்பினர். உடனே பெரியசாமியிடம் ஐஸ் வாங்கிவரும்படி கூறினர். பெரியசாமியோ பல இடங் களுக்குப் போனர். ஆனால், ஐஸ் கிடைக்கவில்லை. திரும்பி