பக்கம்:பாவேந்தர் பாரதிதாசன் அறுசுவை விருந்து.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 வரத்துச் செலவுக்கு மட்டும் ஏதாவது எடுத்துக் கொண்டு மீதியைச் நிதிக்குத் தந்துவிடுவார். நிதி உதவி என்ருல் அப்படிச் செய்யக் கூடிய தாராளத் தன்மையுடையவர்' என்று கூறினர் கவிஞர். 31 சீக்கிரம் புரிந்து கொள்! செட்டிநாட்டுப் பகுதியில் கவிஞர் செல்லும்போ தெல்லாம் கானடுகாத்தான் வைசு மஞ்சுளாபாய் இல்லத் தில் தங்குவது வழக்கம். நண்பர்களும் அன்பர்களும் அங்கே கூடி கலந்து உரையாடுவது வழக்கம். அரசியல், இலக்கியம், சமூகம் எல்லாவற்றையும் பற்றி பேசக்கூடியவர் கவிஞர். - கவிஞர் கூறிய கருத்தை அருகில் இருந்த ஒரு அன்ப ரால் புரிந்துகொள்ள இயலாமல் திருதிரு வென விழித்தார். 'உம், மெல்லு, கடி, ஜீரணி' என்ருர் கவிஞர். அன்பரோ மேலும் குழம்பிப் போனர். கருத்தை சிந்தித்துப் புரிந்து கொள்ளும்படி வைசு அவர்கள் விளக்கிக் கூறிய பின்னரே, அதைத்தான் கவிஞர் அவ்வாறு கூறினர் என்பதை அங்கிருந்தோர் புரிந்து கொண்டனர். l 32 உனக்குச் சகோதரிகள் இருக்கிருர்களா? கடை வீதியில் போய்க் கொண்டிருக்கும்போது, எதையேனும் ஒரு பொருளேப் பார்த்து விட்டால், உடனே அதை வாங்கிக்கொண்டு, அதற்குப் பணம் கொடுக்கும் :படி கூறிவிடுவார் கூடவருவோரிடம். -