பக்கம்:பிராயச்சித்தம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 லா. ச. ராமாமிருதம் இது சமாதானமா? தைரியமா? தன் உண்பை யா? அந்தக் கமலாம்பிகைக்குத்தான் வெளிச்சம். இரவுகளில் தூக்கம் மறுத்து, படுக்கையில் புர ருகை யில் கமலாம்பிகை நினைப்பில் வருவாள். ஒட்டினாற் போல் பெரியப்பாவையும் நினைப்பது இயல்புதானே! பெரியப்பாவின் தாத்தா நாளிலிருந்தே குடும்பம் ஆஜை செய்த தெய்வமாச்சே கமலாம்பிகை. பெரியப்பா அசகாய சூரன். வாள் எடுத்தவன் தான் வீரனா? நாக்கைக்கட்டி, வயிற்றைக்கட்டி உடம்பில் ஆயிரம் கோளாறுகள்-சர்க்கரை, உப்பு, ரத்தக்கொதிப்பு, மூத்திரக்கட்டு, மூலம்-இளம்பிள்ளை வாதத்தில் வலது கால் முறுக்கிக் கொண்டுவிட்டது. இதே ரீதியில் கத்தி முனையில் நடந்தே மனிதன் தன் முழு ஆயுசையும் நடத்தி இருக்கிறார் என்பதைச் சிந்திக்கையில் மனித சாதனைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி இருக்கிறார். சாவுக் கடிதாசு எட்டு முத்திரைகளைத் தாங்கிக் கொண்டு ஊர்ஊராகத் தேடி அவரை அடைகையில் முதல் மாசிகம் ஆயிருக்கும். ஆளே போயாச்சு, இருப்பவரைக் கட்டி அழுவதும் இருப்பவர் நடத்தும் நாடகம்தானே. அப்படி அங்கு ஒட்டுதலும் இல்லை. மணி காய்ச்சல்காரன். அவர் போன மூன்று மாதங்கள் கழித்து பெரியம்மா ඵ් fi H மாகிவிட்ட கடிதாசு. கணக்கே பைசல், நான் போகாதது சரி என்று சாதிக்கவில்லை. பெரியப்பாதுே அப்படித்தான் சொல்லியிருப்பார். என்ன டா தருமு? நீ வந்து எதைத் தடுக்கப்போறே, மனிதன் அப்படிப்பட்டவன், உடம்பில் வாழவில்லை. சித்தத்தில் வாழ்ந்தார். வாழ்ந்து காட்டி 貂f了嫣”。 ஆகாரத்தில், உட்கார்ந்தால் தப்பு, நின்றால் அபராதம், திரும்பினால் தண்டனை. வயிற்றுக்கு திரம் பவும் நாக்குக்கு ருசி பார்க்கவும் மறந்தே போயிருக்கும்.