பக்கம்:பிராயச்சித்தம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 134 தர்மராஜன் ஆவலுடன் காத்திருந்தார். என்ன செய்யப் போlங்க? கேள்வி நாக்கில் துடித்தது. சிரமப் பட்டு அடக்கிக் கொண்டார். "நான் ஒரு முடிவு செஞ்சுட்டேன். ஆள் வந்து கேட் டால் நகைக்குத் தன் சொந்தத்தை prove செய்த பிறகு நகைக்கு ஒரு மதிப்பு போட்டுக் கடனைக் கழிச்சுகிட்டு Balance இந்தா. எனக்கு செத்த யானையேதான் வேணும்னா-அதுவும்-மதறாஸ் கதைதான். உன்னால் ஆணத்தைப் பார்த்துக்கோ. வேறு என்ன நான் செய்ய முடியும்?’’ மறுபடியும் மெளனத்தின் தேக்கம். தர்மராஜனுக்குப் பெரும் இருளில், ஊசிமுனை சந்துவழி வெளிச்சத்தின் தூலம் அடித்தாற்போல் இருந்தது. ஆனால் என்ன வெளிச்சம் என்று புரியவில்லை. பெருமூச்செறிந்தார். "என்ன எளுத்துட்டீங்க?" போக வேண்டாமா? உங்கள் நேரத்தை ரொம்ப வாங்கிக்கொண்டு விட்டேன்.' “@(5 filósofo Qurrayālā. I have something for you.” ட்ராயரிலிருந்து செக் புக்கை எடுத்துப் பரபரவென்று எழுதிக் கிழித்து நீட்டினான். - அவருக்குப் புரியவில்லை. அவர் வாங்கிக் கொள்ள வில்லை. என்ன இது? திகைத்தார். - "பயப்படாதீங்க. வாங்கிக்கங்க. உயிலோடு சாச்சா எனக்கு லெட்டர் வெச்சிருந்தாரே அதிலே உங்களுக்கு 2000) Glåm Gägsburg–what is the matter?” அவன் பிடித்துக் கொண்டிராவிட்டால் விழுந்திருப் பார். தாங்கிக் கொண்டுபோய் சோபாவில் அமரச் செய் தான்.