பக்கம்:பிராயச்சித்தம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 149 புன்னகைத்தான். 'ஸார், நீங்கள் ஆழமான ஆசாமி. உங்களிடம் எனக்கு ஒன்று பிடிச்சிருக்கு. நாம் சந்தித்ததும் நீங்கள் எல்லாப் பெரியவர்களைப்போல் என் வாழ்க்கை யைத் திருத்திக்கொள்வதற்குப் புத்திமதியும், வழிகளும் சொல்லித்தர முற்படவில்லை. சாதாரணமாகப் பெரியவர் களுக்குத் தங்கள் குரலைக் கேட்பதில் ஒரு அலாதி திருப்தி, ஆனால் நீங்கள் அப்படியில்லை. நீங்கள் அழுத்த மானவர்.'" 'சரி விஷயத்துக்கு வருவோம்; என்ன விஷயம்?’’ சுற்றி, வளைக்கவில்லை. 'பார்த் தீர்களா, உடனே நேரே விஷயத்துக்கும் வந்துவிடுகிறீர்கள். உங்களுடன் பிஸினெஸ் பண்ணுவதே ஒரு சந்தோஷம்.' ஸெர்வர் வந்து பண்டங்களை எதிரே வைத்துவிட்டுப் போனான். போன தடவைக்கும் இப்போதைக்கும் இவனிடம் ஏதோ வித்தியாசமிருக்கிறது. இவன் மரியாதைக் குற்ை. வாயில்லை. ஆனால் மனதின் செதிள்கள் உஷாரில் விறைத்துக் கொள்கின்றன. "பிஸினெஸ் பண்ணுவது சந்தோஷம் என்றேன். ஆனால் சுலபமா? இனிமேல்தான் தெரியணும். ஏன்னா, acc உங்கள் கிட்டத்தானிருக்கு.” - 'எனக்குச் சீட்டாட்டம் தெரியாது.” "அப்படியா? இதுதான் சார் வேடிக்கை, உண்மை, விபரீதம். விஷயம் தெரியாதவனிடம்தான் acc. என்னைப் பாருங்கள். சீட்டாட்டத்தில் எப்படி ஜெயிப்பது என்று என்னால் ஒரு புஸ்தகமே எழுதமுடியும். ஆனால் ஜெயிப்பு