பக்கம்:பிராயச்சித்தம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 27 லேன்னு திண்ணையை இடிச்சுட்டு, அங்கே ஒரு போர்ஷ் கட்டி வாடகைக்கு விடறான். அதேமாதிரி சத்திரம் எங்கே இருக்கு?’’ வாளாயினார். 'எனக்குத் தெரிஞ்சு சுங்குவார் சத்திரம் இருக்கு. அதுவும் இங்கு இல்லை. காஞ்சீபுரம் போகும் வழியில். அதுவும் சத்திரம் இல்லே. பாப்பான் சாவடின்னு ஒண்ணு. அதுவும் அப்படித்தான். என்ன ஸ்ார், பதில் பேசாமல் இருக்கேள்? அப்போ Clo ப்ளாட்ஃபாரம்தானே?...ஸார் லார் மன்னிச்சுக்கோங்கோ...டிச்சிலே விழுந்துட்டேன்." அவர் கையைப் பிடித்துக்கொண்டு மாரே வெடித்துவிடும் போல் விக்கி விக்கி அழுதாள். புன்னகை புரிந்தார். வருத்தப்படாதே. nதைகூட ராயனை, லஷ்மணனை இதற்குமேல் பேசினாள். பிரியம் அதிகம்ாகப் போனாலும் வம்புதான். அவள் தலையை அன்புடன் தடவினார். சட்டெனக் கையை இழுத்துக்கொண்டார். 'அதற்கில்லை கோமதி. இருக்கிற இடமே நெருப்புப் பெட்டி. உன் கணவர்...' "என் கணவன் என்னோடு இல்லை. நாங்கள் பிரிஞ்சு இரண்டு வருஷங்களுக்கு மேலாகிறது. இப்போ என்ன சொல்லப்போறேள்?" காற்றுக்கு மூச்சு நின்றுபோச்சு. இலை அசையவில்லை. திடீரென்று கக்கடா, கக்கடா என்று ஒரு பட்சி சிரித்தது. 黎 豪 娘 அது உறக்கத்தின் மயக்கமா, மூர்ச்சையா, யோசனை அதன் வாய்க்கால் வழி மிதந்து செல்கையில் சட்டென