பக்கம்:பிராயச்சித்தம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. மூன்று நாட்களாகவே யாரோ தன்னைத் தொடர்ந்து வருவதைப் போலவோ அல்லது கவனிப்பதாகவோ ஒரு குறுகுறுப்பு. இந்த மூன்று நாட்களாகவே எந்தக் குறித்த நிமித்தமாக அவர் எங்கும் கிளம்பவில்லை. நாள் பூரா வீட்டில் அடைபட்டிருப்பதற்கு மாறுதலாக, மாலை வேளை, காலைவீசி நடக்க வெளியே சென்றபோது இந்தக் கூச்சம் கண்டது. ஆனால் திரும்பிப் பார்த்தால் சொல்லும்படி யாரும் தென்படவில்லை. ஆனால் இந்த சங்கடமான உணர்வு மட்டும் விடவில்லை. அதனாலேயே உலாவக்கூட வெளியே போகவில்லை. ஆனால் அடுத்த நாள் வெளியே கிளம்பினதும் பிடிவாதமாக அது சந்து முனையில் காத்திருந்தது. என்ன இது? என்ன நடத்து கொண்டிருக்கிறது? இதற்காக வெளியில் போகாமலிருக்க முடியுமா? இருக்கலாமா? - கோயிலுக்கு போகலாமா? ஆனால் அங்கு மணியின் தொன தொணப்பையும், மூடுசூளையான கணைகளை யும் சஹித்துக் கொள்ள இன்னும் பொறுமையிருக்குமோ? நடந்துகொண்டே. ஏதேதோ கவலைகள் மொய்க்க ஆரம்பித்துவிட்டன. இன்னும் எத்தனை நாள் இப்படியே கோமதியின் தருமத்தில்? எனக்கென்று நான் ஏதேனும் வழிதேடிக் கொள்ள வேண்டாமா? அ வ ளு ைட ய பிரியமான