பக்கம்:பிராயச்சித்தம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 79 போலீஸ்காரனிடம் நினைப்பூட்டும் சக்தி ஸாதாரண விஷயம் இல்லே ஸார். அது உங்களிடம் இருக்கிறது. థ్రా உங்களிடம் தெரிவித்துக் கொள்ளுத்தான்.நீங்க இப்போ தெருவில் போனதைப் பார்க்க நேர்ந்ததே என் அதிர்ஷ்டம் என்று நினைக்கிறேன்.' 'நீளமான ஸ்பீச்சுதான் தர்மராஜன் கை தட்டினார். 'இநத ஐஸ் எல்லாம் இப்போ எதுக்கு மிஸ்டர்...?' "கமலநாதன்.” 'சரி, கேஸ் முடிஞ்சு போச்சு. தண்டனை அனுபவிச் சாச்சு. அப்புறம் என்ன?’’ 'உண்மை. உ...ண்...மை...' 'என்ன இழுக்கறிங்க. இன்னும் உங்கள் File Close ஆகல்லியா?' 'Oh don't wory. இன்ஸ்பெக்டர் சிரித்தார். நீங்க மறுபடியும் பிக்சர்லே வரப் போறதில்லை. உங்கள்மேல் proof அப்பவே சரியாயில்லையே." "ஆனால் ஐந்து வருஷம் தீர்ப்பில் உள்ளே இருந்து விட்டுத்தானே வந்திருக்கிறேன்: ' 'நீங்கள் தீர்ப்பானது சந்தர்ப்ப ரூபனையில், evidence பத்தல்லேங்க. இதப்பாருங்க அந்த துரக்க மாத்திரை விஷயத்தில டாக்டர் சொன்னார் தான் கார்டினால் எழுதிக் கொடுக்கல்லேன்னு. அதனால் என்ன? patient இன்னும் யாரேனும் சொல்லக் கேட்டு துரக்க மாத்திரையோடு இன்னொரு மாத்திரையா கார்டி னால் வாங்கி வெச்சிருக்கக் கூடாதா? இல்லே அவரைப் பார்க்க வர்றவங்க அலருக்கு நல்லது செய்யறதா நெனச் சுக்கிட்டு தாங்களே கொண்டுவந்து கொடுத்திருக்கக் கூடாதா? ஒரு தடவை போட்டுத்தான் பார்ப்போமேன்னு