பக்கம்:பிராயச்சித்தம்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிராயச்சித்தம் 87 சரி பரமபதப் படத்தில் பெரிய பாம்பு கடிச்சா ச்சு அடி அசடு சற்று நேரத்துக்கு முன்னால்தானே கனவு கண்டு கொண்டிருந்தே, உன் கனவு என்ன ஆச்சு பார்த்தியா? உள்ளே ஒரு கோமதி கொக்கரித்தது. 'என்ன கோமதி, இப்போ என்ன ஆகிவிட்டது?’’ சரி அழல்லே ஸ்ார், முன்றானையால் கண் ணிரைத் துடைத்துக் கொண்டாள். ஆனால் அது பொல பொலத்தது. சரி சொல்லுங்கோ, என்ன பேசினான்: ' ராமா நீதான் துணை, "அதுதான் சொல்கிறேனே, உருப்படியா, உன்கிட்டே சொல்லும்படியாகக்கூட எதுவும் இல்லை. பழை: பாடத்தைத் திரும்பிப் படித்தோம். வேறு என்ன நடக்கும்? நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாகக்கூட இருக்கிறது. நடுமுதுகில் ஐலை வைத்து எடுத்து எடுத்து விளையாடி னான். மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய். ஆனால் போலீஸ்காரனுக்கு அவன் சுபாவம் விடாது. எப்படியும் அவனுக்கு நகை கிடைக்கவில்லையே. கேஸ் முடிஞ்சு போனால் அவன் வரைக்கும், அதாவது சொந்த மான அவன் வரைக்கும் அவன் ஃபைல் மூடப்படவில்லை, அதானால் அவன் என்னை என்ன பண்ண முடியாது என் கிறது வேற விஷயம். அவன் வரையில் ஃபைல் க்ளோள். ஆகவில்லை. அது அவனுக்கு ஒரு சவால். அப்படித்தான் அவன் பார்ப்பான். அவன் நியாயப்படி அது சரிதான் என்று எனக்கே தோன்றுகிறது. கோமதி போலீஸ் உன் னிடம் வந்து விசாரித்ததே, அதாவது லேட், தன் சொந்த பாஷையில் வைத்திருந்த கணக்குப் புத்தகத்திலிருந்து உன் விலாசத்தைத் தெரிந்துகொண்டு உன்னிடம் வந்து விசாரித்ததாக அப்பவே சொன்னான். என்ன விசாரித் தான்? கொஞ்சம் நினைவுபடுத்திப் பார்த்துக்கொண்டு விபரமாகச் சொல்லேன்-' łł