பக்கம்:பிள்ளைக்கலி.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 28 ஐயோ! சாட்டையடி கொடுப்பதாக எண்ணிக் கண் னிமைகளைப் பிளக்கிறேனே! விம்மல்கள் வெடித்து, வெடித்து மலைப் பிராந்தியம் முழுவ தையும் வசப்படுத்திக் கொண்டிருந்தது. எங்கோ பாடும் குயிலின் கீதம், அவளுக்குப் பின்னணி கூட்டும் தோற்றம் எழுப்பியது. நான் எழுந்தேன். அவள் விசும்பலுடன் கூறினுள்! தயவு செய்து உட் காருங்கள்...உட்காருங்கள்...' "ஏன் ? நீ மறைந்த பின்பு, என் வீட்டில் நடந்த கோலா கலங்களைப் பற்றிய செய்தியை உட்கார்ந்து சொல்ல வேண்டுமா ?” "ஐயோ! தயவு செய்து என்னைக் கொல்ல வேண்டாம். நான் நல்லவள்தான்! சந்தர்ப்பம்...இல்லையில்லே...சத்தர்ப்பம் என்பதை விட, விதி என்ன வஞ்சித்து விட்டதென்னலாம்.' 'நல்லவளா ? பேஷ்! அப்புறம்... ? நீ நல்லவள் என்பதை இப்படி ஒரு நிகழ்ச்சியால்தான் காட்டவேண்டுமா ? உனக்கு ஒரு காதலன் உண்டு என்பதை முன்பே கூறியிருக்கக் கூடாதா ?” எனக்குக் காதலன் என்று ஒருவருமில்லை. என் விதி என்னைச் சதி செய்துவிட்டது.' என் உள்ளத்தின் கொந்தளிப்பு ஒரு சிறிது அடங்கிவிட்டது. . அப்படியானுல்...விஜயா! நீ இப்படி வஞ்சிக்க நான் உனக்கு என்ன கொடுமை செய்தேன் ?” விஜயா பதில் கூருமல் வானத்தைப் பார்த்தாள். :விஜயா! உனக்கு விருப்பமானல், நீ rirಒr அப்படி அவமானப்படுத்திய காரணத்தைச் சொல்வாயா ?” 'உங்களிடம் முதலில் மன்னிப்புக் கோருகிறேன். எனது விதி என்ற ஒன்றைத் தவிர வேறு எந்தக் காரணத்தின்மேல் நான் பழி போடமுடியும்! நீங்கள் என்ன மன்னிக்கவேண்டும். ..” ನ விட்டுக் கொடுத்து உட்கார்ந்திருந்தேன். மலை வாயிலில் ஆதவன் உலக பந்தத்தினின்றும் அவிழ்ந்து விழும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/126&oldid=1395745" இலிருந்து மீள்விக்கப்பட்டது