பக்கம்:பிள்ளைக்கலி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஒரு நாள் கழிந்தது புதுமைப் பித்தன்

  • கமலம், அந்தக் கூஜாவிலே தண்ணர் எடுத்தா! வெற்றிவைச் செல்லம் எங்கே? வச்சது வச்ச இடத்திலேயே இருந்தால்தானே?” என்று முணுமுணுத்தார் முருகதாசர்.

கையில் இருக்கும் கோரைப் பாயை விரிப்பதே ஒரு ஜால வித்தை. நெடுநாள் உண்மையாக உழைத்தும் பென்ஷன் கொடுக. டாததால், அது கடுமத்தியில் இரண்டாகக் கிழிந்து, ஒரு கோடியில் மட்டி : ட்டிக் கொண்டிருந்தது. அதை விரிப்பது என்ருல், முதல். உதறித் தரையில் போட்டுவிட்டு, கிழிந்து கிடக்கும் இரண்டு துண்டுகளையும் சேர்த்துப் பொருந்த வைக்க வேண்டும். அதுதான் பூர்வாங்க வேலை, பின்பு, விடுதலை பெற முயற்சிக்கும் அதன் கோரைக் கீற்றுகள் முதுகில் குத்தாமல் இருக்க, ஒரு துண்டையோ, அல்லது மனைவியின் புடைவையையோ, அல்லது குழந்தையின் பாவாடையையோ, எதையாவது எடுத்து மேலே விரிக்க வேண்டும். முருகதாசரைப் பொறுத்த வரை - அது அவரது புனே பெயர் - அது இரண்டுபேர் செய்ய வேண்டிய காரியம். மறுபடியும், கமலா!' என்று கூப்பிட்டார். சமையல்-உக்ராண-ஸ்நான அறை, மூன்று நான்கு கட்டு கள் தாண்டி, துண்டாக, அலாதியாக இருப்பதால், இவருடைய பாய்விரிப்புக் கஷ்டங்கள் அந்த அம்மையாருக்கு எட்டவில்லை. சென்னையில் ஒட்டுக் குடித்தனம்’ என்பது ஒரு ரசமான விஷயம். வீட்டுச் சொந்தக்காரன், குடியிருக்க வருகிறவர்கள் எல்லோரும் திருக்கழுக்குன்றத்துக் கழுகு' என்று நினைத்துக் கொள்ளுவானே என்னமோ! 'குடித்தனக்காரர் குடியிருக்க இரண்டு ரூம் காலி என்று வெளியில் போட்டிருந்த போர்டை தம்பித்தான் முருகதாசர் வீடு-வேட்டையின்போது அங்கே நுழைந்தார். - உள்ளே வீட்டின் பாக வசதிதான் விசித்திரமாக இருந்தது. முன் பக்கம் ஒற்றைச் சன்னல் படைத்த ஒரு சிற்றறை. அதற்கப் புறம், எங்கோ பல கட்டுகள் தாண்டி, மற்ருெரு அறை. அதுதான் சமையல் வகையராவுக்கு. முதல் அன்ற படிக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/3&oldid=1395619" இலிருந்து மீள்விக்கப்பட்டது