பக்கம்:பிள்ளைக்கலி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 3 "என்ன, இப்படிப் பார்க்கிறே : ஒரு மாசத்திலே நான் திருப்பிக் கொடுத்திடறேன்' என்ருள் அபரஞ்சி. நீண்ட நேர மெளனத்துக்குப்பின் மெள்ளத் தலைநிமிர்ந்த ஆண்டியப்பன், ம்... இதுபத்தி நான் யோசனைப் பண்ணித் தான் ஒரு முடிவு சொல்ல முடியும். டுட்டிக்கு நேரமாயிடுச்சு: நான் வர்றேன்...' என்றபடி அங்கிருந்து வேகமாகத் திரும்பி நடந்தான். ஐந்து நாட்களுக்குப்பின் அன்று அடக்கவொண்ணு மகிழ்ச்சியுடன் அரச மரத்தடியில் உட்கார்ந்திருத்தான் ஆண்டியப்பன். அவனுடைய நெடுநாள் கனவு இன்று இதோ நனவாகிக் கொண்டிருந்தது. ஆமாம்; மின்சார இலாகா சிப்பந்திகள் ஒர் அழகிய இரும்புக் கம்பத்தைக் கொண்டுவந்து நொண்டிப் பிள்ளையார் கோயில் எதிரில் நிற்கவைத்து அதில் டும் விளக்கைப் பொருத்திக் கொண்டிருந்தார்கள். இன்ருே நாளையோ மின்சார இணைப்புக் கொடுத்ததும் விளக்கு எரிய ஆரம்பித்து விடும்!... என்றும் இல்லாத அதிசயமாகத் தபால்காரன் வந்து, "பூரீமான் ஆண்டியப்பன், டிரஸ்டி, நொண்டிப் பிள்ளையார் கோயில். .’’ என்று விலாசத்தைப் படித்துச் சொல்லியவாறு ஒரு கடிதத்தை ஆண்டியப்பனிடம் கொடுத்துவிட்டுச் சென்றன். ஆண்டியப்பனுக்குப் பெருமை பிடிபடவில்லை. தன்னை டிரஸ்டி என்று குறிப்பிட்டுக் கடிதம் எழுதும் அளவுக்குத் தான் உயர்ந்துவிட்டதை எண்ணி அவன் மகிழ்ந்தே போஞன். ஆனல் அந்தக் கடிதம் யாரால் எங்கிருந்து தனக்கு எழுதப் பெற்றிருக் கிறது என்பதை அவளுல் தெரிந்து கொள்ளமுடியவில்லை. கடி தத்தில் என்ன எழுதப் பெற்றிருக்கிறது என்பதும் அவனுக்குப் புரியவில்லை. நாளைக் காலை வேலாயுதத்தைப் பார்த்து அவரிடம் அதைப் படிக்கக் கொடுத்து விஷயத்தைத் தெரிந்து கொள்ளலாம் என்ற முடிவுடன் கடிதத்தை மடியில் பத்திரமாக வைத்துக் கொண்டான். - மறுநாள் காலை. ஆண்டியப்பன் பிள்ளையார் பூஜையை முடித்துக்கெ ண்டு அரசமரத்துக்குப் பின்னல் வந்து உட்கார்ந்தான் இ rడిషు

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/81&oldid=1395700" இலிருந்து மீள்விக்கப்பட்டது