பக்கம்:பிள்ளைக்கலி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 5 'நான் அறநிலையப் பாதுகாப்பு இலாகாவிலிருந்து வருகிறேன். நான் ஒரு சர்க்கார் அதிகாரி. நேற்று உமக்கு எங்கள் இலாகாவிலிருந்து ஒரு கடிதம் வந்திருக்குமே, வந்ததா ?” ஆண்டியப்பன் இதைக்கேட்டு உள்ளுறப் பயந்து விட்டான். சர்க்கார் அதிகாரி என்றதுமே யாருக்கும் எற்படுகிற பயம் அது. "ஆமாங்க ஒரு கடிதாசி வந்தது. இதோ அது இருக்குங்க.' 'அதில் எழுதியிருந்தவற்றைப் படித்தீரா ?” ஆண்டியப்பன் தலையைச் சொறிந்தான். 'ஒ, ... நீ படிக்கத் தெரியாதவன ? சரி; இந்தக் கோயிலிலே நீ எத்தனே வருஷங்களாகப் பூசாரியாயிருக்கிருய் ?’’ 'மூணு வருஷமாங்க.' 'தினப்படி இந்தக் கோயிலுக்கு எவ்வளவு வருமானம் வருகிறது ?’’ - ஆண்டியப்பன் யோசனை பண்ணிஞன். என்னப்பா, யோசிக்கிருய் ? சராசரி ஒரு நாளைக்கு இirறு ரூபாய் வருமா ? என்று அழுத்தமான குரலில் கேட்டார் அதிகாரி. - 'ஐயோ, நூறு ரூபாயா ? என்னங்க இது? நம்ம ஜனங்க கிட்டே பணம் அப்படியா புரளுது? நாளொண்ணுக்கு உண்டியிலே ரெண்டோ மூணுே விழுமுங்க' என்று கூறினன் ஆண்டியப்பன் பண்ரிவாக, - - 'சே என்னுல் இதை நம்ப முடியாது. குறைந்த பட்சம் ஐம்பது ரூபாயாவது வரும். நீ பொய் சொல்கிருய்.” ஆண்டியப்பன் துடிதுடித்துவிட்டான். 'பொய் சொல் றேன?... என்ைேட பிள்ளையார் வருமானத்தில் நான பொய் சொல்றேன் ? என்று நடுங்கினன். சரி, சரி. இது சர்க்கார் உத்தரவு. இன்றையிலிருந்து இந்தக் கோயிலைப் பராமரிக்கும் பொறுப்பை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம். நீ எப்போதும்போல் பூசாரியாய் இருக்க லாம். உனக்கு மாதச் சம்பளம் முப்பது ரூபாய் மேலே ஒரு நிர்வாகி நியமிக்கப்பட்டிருக்கிரு.ர். இ தான் இந்தக் கோயிலின் வரவு செலவைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பிள்ளைக்கலி.pdf/83&oldid=1395702" இலிருந்து மீள்விக்கப்பட்டது